வாவ்...இவ்ளோ அழகா செவ்வாய் கிரகம்? - 3டி புகைப்படங்களை அனுப்பி வியக்க வைத்த மங்கள்யான்!
டெல்லி: செவ்வாய் கிரகத்தின் வியக்க வைக்கும் முப்பரிமாண தோற்றங்களைப் படம் பிடித்து அனுப்பியுள்ளது மங்கள்யான் விண்கலம்.
செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்கு 74 மில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூபாய் 475 கோடி பட்ஜெட்டில், மங்கள்யான் என்ற விண்கலத்தை கடந்த 2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5 ஆம் தேதி இந்தியா விண்வெளிக்கு அனுப்பியது. இந்த விண்கலம் திட்டமிட்டபடி வெற்றிகரமாக கடந்த ஆண்டு செப்டம்பர் 24 ஆம் தேதி செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்ட பாதையில் செலுத்தப்பட்டது.

இதன்மூலம் செவ்வாய் கிரகத்தை முதல் முயற்சியிலேயே அடைந்த நாடு என்ற சாதனையை இந்தியா படைத்தது. செவ்வாய்க்கு விண்கலத்தை அனுப்பிய உலகின் 4 ஆவது நாடு என்ற பெருமையும் இந்தியாவுக்கு கிடைத்தது. இது விண்வெளித்துறையில் இந்தியாவுக்கு உலகளாவிய கவுரவத்தை பெற்று தந்தது. இந்த மங்கள்யான் விண்கலம், தற்போது செவ்வாய் கிரகத்தை ஆராய்ந்து வருகிறது. அது தொடர்பான படங்களையும் எடுத்து பூமிக்கு அனுப்பி வருகிறது.
மங்கள்யான் விண்கலத்தில் "மார்ஸ் கலர் கேமரா" என்னும் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இந்த கேமரா, செவ்வாய் கிரகத்தின் முப்பரிமாண படங்களை கடந்த மாதம் 19 ஆம் தேதி எடுத்து அனுப்பி உள்ளது. அதில் செவ்வாய் கிரகத்தில் உள்ள "ஓபிர் சஸ்மா" என்ற பள்ளத்தாக்கு இடம் பெற்றுள்ளது.
"ஓபிர் சஸ்மா" பள்ளத்தாக்கின் சுவர்கள் பல அடுக்குகளை கொண்டதாக அமைந்துள்ளன. அதன் தரைப்பகுதியும் அடுக்கு பொருட்களின் சேகரிப்பாக அமைந்துள்ளது. இது தொடர்பாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு இஸ்ரோ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "மங்கள்யான் எடுத்து அனுப்பியுள்ள இந்த படங்கள் ஆயிரத்து 857 கி.மீ. உயரத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது" என கூறப்பட்டுள்ளது.
செவ்வாய் கிரகத்தில் உள்ள பள்ளத்தாக்கை மங்கள்யான் படங்கள் எடுத்து அனுப்பி இருப்பதை பிரதமர் நரேந்திர மோடி, "டுவிட்டர்" பக்கத்தில் பாராட்டி உள்ளார். "வியக்க வைப்பதாக இப்புகைப்படங்கள் அமைந்துள்ளது" என அவர் குறிப்பிட்டுள்ளார்.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications