பூமியைத் தொடர்ந்து நிலவின் வட்டப் பாதையையும் கடந்தது மங்கள்யான்...
Subscribe to Oneindia Tamil
ஹைதராபாத்: இந்தியாவின் செவ்வாய் கிரக ஆய்வு விண்கலமான மங்கள்யான், பூமியைத் தொடர்ந்து அடுத்து நிலவின் வட்டப் பாதையையும் தற்போது கடந்து விட்டது.
இன்று காலை நிலவின் வட்டப் பாதையை அது கடந்து சென்றதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இஸ்ரோ வெளியிட்ட அறிக்கையில், இந்தியா இதுவரை விண்ணுக்கு அனுப்பிய பொருட்களிலேயே மிக நீண்ட தொலைவுக்குப் போன முதல் பொருள் என்ற பெருமையை தற்போது மங்கள்யான் விண்கலம் பெற்றுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமைதான் புவி வட்டப் பாதையிலிருந்து செவ்வாய் கிரகத்தை நோக்கிய தனது பயணத்தைத் தொடங்கியது மங்கள்யான் என்பது நினைவிருக்கலாம்.
10 மாத பயணத்திற்குப் பின்னர் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் செவ்வாய் கிரகத்தை சென்றடையும் மங்கள்யான்.












Click it and Unblock the Notifications