விண்வெளிக்கு மனிதர்களை அனுப்ப திட்டம்.. இஸ்ரோவின் முதல் கேப்ஸ்யூல் டெஸ்டே சூப்பர் வெற்றி
விண்வெளியில் இருந்து மனிதர்களை பூமிக்கு கொண்டு வர உதவும் கேப்ஸ்யூல் வசதியை இந்தியாவின் இஸ்ரோ சிறப்பாக செய்து முடித்துள்ளது.
Recommended Video

டெல்லி: விண்வெளியில் இருந்து மனிதர்களை பூமிக்கு கொண்டு வர உதவும் கேப்ஸ்யூல் வசதியை இந்தியாவின் இஸ்ரோ சிறப்பாக செய்து முடித்துள்ளது. இந்த சோதனையில் இந்தியா வென்றுள்ளது.
இந்த வருடம் செய்யப்படுவதில் பெரிய திட்டம் என்றால் அது சந்திராயன் திட்டம்தான். சந்திராயன் திட்டம் ஒன்று வெற்றி அடைந்ததை அடுத்து தற்போது சந்திராயன் திட்டம் இரண்டு செயல்படுத்தப்பட உள்ளது.
இந்த நிலையில் அந்த திட்டத்திற்கு முன்பு ஸீரோ வேறொரு பெரிய சோதனையில் வென்றுள்ளது. விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சியின் முதல் டெஸ்டில் பாஸாகி இருக்கிறது.

மனிதர்கள்
இது வரையில் இஸ்ரோ பல அல்ட்டிமேட் ஆராய்ச்சிகளை செய்து இருந்தாலும் விண்வெளிக்கு ஒருமுறை கூட மனிதர்களை அனுப்பியதில்லை. அதற்கான சோதனைகளையும் பெரிய அளவில் செய்தது இல்லை.ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நிலவிற்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று இஸ்ரோ கூறியது.

கேப்ஸ்யூல் என்றால் என்ன
இது போல மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் திட்டங்களில் கேப்ஸ்யூல் ஒன்று பயன்படுத்தப்படும். விண்வெளியில் இருந்து திரும்ப வரும் போது, பூமியில் இறங்குவதற்கு இந்த கேப்ஸ்யூல்தான் உதவும். அதேபோல் இங்கிருந்து வெளியே செல்லும் ராக்கெட் பிரச்சனைக்கு உள்ளானாலும் இந்த கேப்ஸ்யூல் மூலம்தான் தப்பிக்க முடியும். எல்லா காலநிலையையும் சமாளிக்கும் வகையில் இது உருவாக்கப்பட்டு இருக்கும்.

இஸ்ரோ
இந்த நிலையில் இதை உருவாக்க இருப்பதாக இஸ்ரோ இரண்டு வருடங்களுக்கு முன்பு கூறியது. அதேபோல் தற்போது வெற்றிகரமாக இதை உருவாக்கி உள்ளது. இந்த கேப்ஸ்யூலுக்கு பெயர் வைக்கப்படவில்லை. இது முழுக்க ,முழுக்க இஸ்ரோவின் தயாரிப்பில் உருவாக்கப்பட்ட கேப்ஸ்யூல் ஆகும். இதை தற்போது வெற்றிகரமாக சோதனை செய்தும் முடித்து இருக்கிறார்கள்.

என்ன நடந்தது
இந்த ராக்கெட் கேப்ஸ்யூல் முழுக்க முழுக்க பூமிக்கு வெளியே அனுப்பப்படவில்லை. பூமியில் இருந்து ராக்கெட் மூலம் 2.5 கிலோ மீட்டருக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அதன் பின் தனியாக கழற்றிவிடப்பட்டுள்ளது. பின் பூமிக்கு அனுப்பப்பட்டுள்ளது. இது வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது இந்த கேப்ஸ்யூல் அரபிக்கடலில் மிதந்து கொண்டுள்ளது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications