ரூ.2,500 கோடி வரி ஏய்ப்பு எதிரொலி... காக்னிசென்ட் நிறுவன வங்கிக் கணக்குகள் முடக்கம்!
வருமான வரி ஏய்ப்பு செய்ததாக காக்னிசன்ட் நிறுவன வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
Subscribe to Oneindia Tamil
டெல்லி : ரூ.2,500 கோடி வரி ஏய்ப்பு செய்ததாக காக்னிசன்ட் நிறுவனத்தின் வங்கிக் கணக்குகளை வருமான வரித்துறை முடக்கியுள்ளது.
இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத் துறையில் முன்னணி நிறுவனமாக இருக்கிறது காக்னிசன்ட். இந்த நிறுவனம் ரூ. 2,500 கோடி வரி ஏய்ப்பு செய்ததாக வருமான வரித்துறை ஏற்கனவே நோட்டீஸ் அளித்துள்ளது.

வருமான வரித்துறையின் நோட்டீசிற்கு முறையான விளக்கம் அளிக்கப்படாததால் காக்னிசன்ட் நிறுவனத்தின் சென்னை மற்றும் மும்பை கிளைகளின் வங்கிக் கணக்குகளை வருமானவரித்துறை முடக்கியுள்ளது. 2016-17ம் ஆண்டிலேயே செலுத்த வேண்டிய இந்த வரி பாக்கி தொகையை காக்னிசன்ட் நிறுவனம் செலுத்தாததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications