டெல்லி ஔரங்கசீப் சாலையின் பெயரை மாற்ற முதலில் கோரிக்கை விடுத்த பாகிஸ்தானியர்
டெல்லி: டெல்லியில் உள்ள ஔரங்சீப் சாலைக்கு மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்தல் கலாமின் பெயரை வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது ஒரு பாகிஸ்தானியர் என்பது தெரிய வந்துள்ளது.
டெல்லியில் உள்ள ஔரங்கசீப் சாலைக்கு மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பெயரை வைக்கப் போவதாக மாநகராட்சி அண்மையில் அறிவிப்பு வெளியிட்டது. சாலையின் பெயரை மாற்ற சிலர் எதிர்ப்பும் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் இது குறித்து ஆர்.எஸ்.எஸ். நாளிதழான ஆர்கனைசரில் கூறியிருப்பதாவது,
கனடாவில் வசிக்கும் பாகிஸ்தானைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் தாரிக் பதேஹ் கடந்த 2013ம் ஆண்டு இந்தியா வந்தபோது முகலாய மன்னர் ஔரங்கசீப் பெயரில் சாலை இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அவர் அந்த சாலையின் பெயரை மாற்றுமாறு இந்திய முஸ்லீம்களுக்கு கோரிக்கை விடுத்தார். அந்த சாலைக்கு ஔரங்கசீப்பின் சகோதரர் தாரா ஷிகோவின் பெயரை வைக்க வேண்டும் என்று அவர் கோரினார்.
இந்நிலையில் கலாம் மறைவுக்கு பிறகு ஔரங்கசீப் சாலைக்கு அப்துல் கலாமின் பெயரை வைக்க வேண்டும் என அவர் ட்விட்டர் மூலம் கோரிக்கை விடுத்தார். இதையடுத்து டெல்லியைச் சேர்ந்த பாஜக எம்.பி. ஒருவர் பிரதமர் மோடியை அணுகி ஔரங்கசீப் சாலைக்கு கலாம் பெயர் வைக்க வேண்டும் என்று கூறினார்.
டெல்லியின் முக்கிய பகுதியில் இருக்கும் ஔரங்கசீப் சாலையில் பல கோடீஸ்வரர்கள் வசித்து வருகிறார்கள். ஔரங்கசீப் 6வது முகலாய மன்னர் ஆவார். 17வது நூற்றாண்டில் அவர் இந்திய துணைகண்டத்தின் பல்வேறு பகுதிகளை ஆட்சி செய்தார். ஔரங்கசீபால் கொலை செய்யப்பட்ட சீக்கிய குரு தேக் பகதூரின் பெயரை ஔரங்கசீப் சாலைக்கு வைக்க வேண்டும் என டெல்லி சீக்கிய குருத்வாரா நிர்வாக குழு கடந்த 2014ம் ஆண்டு கோரிக்கை விடுத்தது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications