முதல் கட்ட சட்டசபை தேர்தல்: காஷ்மீரில் 70%; ஜார்க்கண்ட்டில் 62% வாக்குகள் பதிவு!!
ராஞ்சி/ஸ்ரீநகர்: ஜார்க்கண்ட் மற்றும் ஜம்மு- காஷ்மீர் மாநில முதல் கட்ட சட்டசபை தேர்தலில் தீவிரவாதிகளின் கடும் எதிர்ப்புகளையும் மீறி கணிசமான அளவு வாக்குகள் பதிவாகின. ஜம்மு காஷ்மீரில் 70% வாக்குகள் பதிவாகி சாதனை படைக்கப்பட்டுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் 62% அளவுக்கு வாக்குகள் பதிவாகின.
87 தொகுதிகளைக் கொண்ட ஜம்மு- காஷ்மீரில் முதல் கட்டமாக கார்கில், லடாக் உள்ளிட்ட 7 மாவட்டங்களைச் சேர்ந்த 15 தொகுகளில் வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப் பதிவு நடைபெற்றது.

இங்கு மொத்தம் 123 வேட்பாளர்கள் களத்தில் நிறுத்தப்பட்டனர். 10 லட்சத்து 51 ஆயிரத்து 642 பேர் வாக்காளர்கள். மொத்தம் ஆயிரத்து 787 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இங்கு சட்டசபை தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்று பிரிவினைவாதிகள் அழைப்பு விடுத்திருந்தனர். ஆனால் பிரிவினைவாதிகளின் அழைப்பை நிராகரித்து பொதுமக்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர்.
மேலும் தேர்தலை சீர்குலைக்கும் வகையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 4 கண்ணி வெடிகளும் கண்டுபிடிக்கப்பட்டன. இதனிடையே பந்திப்போரா என்ற இடத்தில் வெடிகுண்டு வெடித்தது. ஆனால் இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பலத்த பாதுகாப்புடன் வாக்குப் பதிவு நடைபெற்றது.
இன்று காலையில் முதல் சில மணி நேரங்களில் 18-20% வாக்குகள் பதிவாகி இருந்தன. பிற்பகலில் இது 50%-க்கும் அதிகமாக அதிகரித்தது. வாக்குப் பதிவு மாலை 4 மணி வரை நடைபெற்றது. மொத்தமாக 70% வாக்குகள் பதிவாகி சாதனை படைத்துள்ளனர் ஜம்மு காஷ்மீர் மக்கள்.
பந்திப்போர்- 70.3%; கிஸ்த்வார்- 70%; லே- 57%; கார்கில் 59%; தோடா 76% என வாக்குகள் பதிவாகி இருந்தது.
ஜார்க்கண்ட்
81 தொகுதிகளைக் கொண்ட ஜார்க்கண்ட்டில், மாவோயிஸ்ட் ஆதிக்கம் அதிகம் உள்ள 13 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெற்றது. காலை 7 மணி முதல் மாலை 3 மணி வரை வாக்குப் பதிவு நடந்தது.
மொத்தம் 199 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். வாக்குப்பதிவுக்காக மொத்தம் 3 ஆயிரத்து 939 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. இங்கும் தேர்தலைப் புறக்கணிக்குமாறு மாவோயிஸ்டுகள் அழைப்பு விடுத்திருந்தனர்.
ஆனால் மாவோயிஸ்டுகளின் அழைப்பை நிராகரித்து பொதுமக்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர். மாலை வரை மொத்தம் 62% அளவில் வாக்குகள் பதிவாகி இருந்தன.
தேர்தலையொட்டி, மத்திய ரிசர்வ் போலீசாருடன், துணை ராணுவப் படையினரும் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
பிரதமர் மோடி அழைப்பு
முன்னதாக ஜார்க்கண்ட் மற்றும் ஜம்மு காஷ்மீரில் இளைஞர்கள் பெருமளவில் வந்து வாக்களிக்க வேண்டும் என்று தமது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை அழைப்பு விடுத்திருந்தார்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications