ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளால் போலீஸ் கான்ஸ்டபிள் சுட்டுக் கொலை
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளால் போலீஸ் கான்ஸ்டபிள் இர்ஷத் அகமது இன்று காலை சுட்டுக் கொல்லப்பட்டார். இதனால் அங்கு பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையேயான மோதல் தொடர்ந்து நீடித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னதாக தீவிரவாதிகள் கும்பல் ஒன்று போலீசார் மீது கையெறிகுண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தினர். இதில் 15 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த நிலையில் புல்வாமா பகுதியில் இன்று காலை தமது வீட்டில் இருந்து பணிக்கு புறப்பட்டுச் சென்ற போலீஸ் கான்ஸ்டபிள் இர்ஷத் அகமதுவை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர். இது அங்கு பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
ஹிஸ்புல் முஜாஹிதீன் தளபதி புர்கான் வானி கொலையைத் தொடர்ந்து கடந்த 47 நாட்களாக வன்முறையின் பிடியில் சிக்கிய ஜம்மு காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை அடியோடு நாசமாகி உள்ளது.












Click it and Unblock the Notifications