பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுன்ட்டரெல்லாம் இல்லை.. 21 நாட்களுக்குள் தூக்கு.. ஜெகன் மோகன் அதிரடி
Recommended Video
அமராவதி: பாலியல் குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு 21 நாட்களுக்குள் தூக்கு தண்டனை விதிக்கப்படும் என ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்தார்.
ஆந்திரத்தின் இளம் முதல்வரான ஜெகன்மோகன் ரெட்டி பல்வேறு அதிரடிகளை செய்து வருகிறார். இந்த நிலையில் தெலுங்கானாவில் நடந்த என்கவுன்ட்டர் சரிதான் என தெரிவித்துள்ளார்.
தெலுங்கானாவில் பெண் மருத்துவர் கடந்த மாதம் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு தீ வைத்து எரித்து கொல்லப்பட்டார். இந்த விவகாரத்தில் சென்னகேசவலு, முகமது ஆரிப், ஜொல்லு சிவா, ஜொல்லு நவீன் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

கொலை
இதையடுத்து அவர்களிடம் வாக்குமூலத்தை பெற்றுக் கொண்ட போலீஸார் கொலை எப்படி நடந்தது என்பது குறித்து நடித்து காட்ட சம்பவ இடத்துக்கு அழைத்து சென்றனர். அப்போது அவர் தப்பிக்க முயன்றனர்.

குடுமபத்தினர்
போலீஸார் எச்சரிக்கை விடுத்தும் அவர்கள் கேட்காததால் அவர்கள் 4 பேரையும் என்கவுன்ட்டர் செய்தனர். இந்த சம்பவம் இந்தியாவை அகம் மகிழ வைத்தது. இதை இறந்த பெண் மருத்துவரின் குடும்பத்தினரும், நிர்பயாவின் குடும்பத்தினரும் வரவேற்றுள்ளனர்.

7 ஆண்டுகள்
இந்த நிலையில் இதை ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியும் வரவேற்றுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் நிர்பயா பெயரில் அனைத்து மாநிலங்களிலும் பாலியல் குற்றவாளிகளுக்கு எதிராக சட்டம் இயற்றப்பட்டுள்ளது. ஆனால் 7 ஆண்டுகளாகியும் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கவில்லை.

சுட்டுக் கொல்லப்பட்டது
பாலியல் குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை வழங்குவதே சரியானது. தெலுங்கானா பெண் மருத்துவர் கொல்லப்பட்டதை அறிந்து ஒரு தந்தையாக நான் மிகவும் வருத்தப்பட்டேன். அந்த குற்றவாளிகள் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதை அறிந்தவுடன் சற்று நிம்மதி ஏற்பட்டது.

தூக்கு தண்டனை
இதை நான் வரவேற்கிறேன். ஆந்திரத்திலும் இது போல சட்டத்தை இயற்ற வேண்டும். பாலியல் குற்றவாளிகள் ஒரு வாரத்துக்குள் விசாரிக்கப்பட்டு 21 நாட்கள் அதாவது 3 வாரங்களுக்குள் தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
-
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
ஹார்முஸ் ஜலசந்தி.. உலகையே உலுக்கும் 'கடல் கண்ணிவெடிகள்'.. கழுத்தை நெரிக்கும் ஈரான்.. டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications