Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜெகன்மோகன் ரெட்டி vs சந்திரபாபு நாயுடு! சொந்த தொகுதியில் ஆதிக்கம் செலுத்துவது யார்! இது ஆந்திர அரசியல்

Subscribe to Oneindia Tamil

அமராவதி: ஆந்திராவில் இப்போது ஜெகன்மோகன் ரெட்டி vs சந்திரபாபு நாயுடு என்ற சூழல் உருவாகியுள்ள நிலையில், இவரும் கடந்த முறை எங்கு போட்டியிட்டனர்.. எவ்வளவு வாக்கு வித்தியாசத்தில் வென்றுள்ளனர் என்பது குறித்துப் பார்க்கலாம்.

நமது நாட்டில் இன்று 4ஆம் கட்ட லோக்சபா தேர்தல் நடைபெறும் நிலையில், அத்துடன் ஆந்திர மாநிலத்திற்குச் சட்டசபைத் தேர்தலும் நடக்கிறது. அங்கு இந்த முறை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

Jaganmohan Reddy vs Chanrababu Naidu Which of the two dominates the home constituency in Andhra

இவ்விரு கட்சியின் தலைவர்கள் எங்குப் போட்டியிடுகிறார்கள்.. அதில் கடந்த முறை அவர்கள் பெற்ற வாக்குகள் என்ன என்பதை நாம் பார்க்கலாம்.

ஜெகன்மோகன் ரெட்டி: இதில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திர மாநிலத்தில் உள்ள புலிவெந்துலா என்ற தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த புலிவெந்துலா தொகுதி ஒஸ்எஸ்ஆர் குடும்பத்தின் கோட்டையாகக் கருதப்படுகிறது. கடந்த 1978ஆம் ஆண்டு முதலே ஒஸ்எஸ்ஆர் குடும்பத்தைச் சேர்ந்தவர்களே இந்த தொகுதியில் வென்றுள்ளார்.

இந்த தொகுதியில் 2010ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு ஒய்எஸ்ஆர் குடும்பத்தினர் வென்றுள்ளனர். அதன் பின்னர் காங்கிரஸுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் என்ற தனிக்கட்சியை ஜெகன்மோகன் ரெட்டி தொடங்கிய நிலையில், 2011க்கு பிறகு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் இந்த தொகுதியில் 3 முறை வென்றுள்ளது.

மிக பெரிய பெற்றி: 2014, 2019 என இரு தேர்தல்களில் ஜெகன்மோகன் ரெட்டி இந்தத் தொகுதியில் வென்றுள்ளார். கடந்த 2019 தேர்தல் சமயத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் சார்பில் ஜெகன்மோகனும், தெலுங்கு தேசம் சார்பில் சதீஷ் குமாரும் போட்டியிட்டனர். இதில் சதீஷ் குமார் வெறும் 42 ஆயிரம் வாக்குகளை மட்டுமே பெற்ற நிலையில், ஜெகன்மோகன் சுமார் 1.32 லட்சம் வாக்குகளைப் பெற்று சுமார் 90 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

சந்திராபாபு நாயுடு: ஆந்திராவில் ஜெகனுக்கு இந்த முறை சந்திரபாபு நாயுடு மிகக் கடுமையான போட்டியைக் கொடுத்து வருகிறார். ஆந்திராவில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க அவர் பாஜக மற்றும் பவன் கல்யாண் உடன் கூட்டணி அமைத்து இந்தத் தேர்தலை எதிர்கொள்கிறார். சந்திரபாபு நாயுடு இந்த முறை குப்பம் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த தொகுதி சந்திரபாபு நாயுடுவின் கோட்டையாகவே இருக்கிறது.

கடந்த 1983 முதலே அவரது தெலுங்கு தேசம் கட்சி தான் இங்கு வென்றுள்ளது. குறிப்பாக 1989 முதல் சந்திரபாபு நாயுடு தான் இங்கு வென்று வந்துள்ளார். அந்தளவுக்கு இங்கு சந்திரபாபு நாயுடு வலிமையாக இருக்கிறார். கடந்த தேர்தலில் இந்த குப்பம் தொகுதியில் சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் சார்பில் சந்திரமவுலி, காங்கிரஸ் சார்பில் சுரேஷ் பாபு போட்டியிட்டனர்.

வெற்றி: ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் வேட்பாளர் 69 ஆயிரம் வாக்குகளைப் பெற்ற நிலையில், சந்திரபாபு நாயுடு சுமார் 1 லட்சம் வாக்குகளைப் பெற்று 30 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்தத் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் வெறும் 3800 வாக்குகளை மட்டுமே பெற்று டெபாசிட் இழந்தது குறிப்பிடத்தக்கது.

கடும் போட்டி: இந்த முறை ஆந்திர அரசியல் களம் ஜெகன்மோகன் ரெட்டி vs சந்திரபாபு நாயுடு என்றே உருவெடுத்துள்ளது. இருவருமே தங்கள் கோட்டையில் போட்டியிடுவதால் அவர்கள் தங்கள் தொகுதியில் வெல்வது உறுதி.. ஆனால், ஆந்திர மாநிலத்தில் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களைப் பெறுவார்களா என்பதே கேள்வி.. இதற்கான பதில் வரும் ஜூன் 4ஆம் தேதி தெரிந்துவிடும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+