திரிணாமுல் காங்., கட்சி கூட்டத்தில் "ஜெய் ஸ்ரீ ராம் கோஷம்"... போலீஸ் தடியடி
கொல்கத்தா: ஜெய் ஸ்ரீ ராம் கோஷங்கள் திரிணாமுல் காங்கிரஸின் கட்சி கூட்டத்தில் மீண்டும் ஒலித்தது. இதனால், போலீசார் தடியடி நடத்தியதல், பரபரப்பு ஏற்பட்டது.
சில தினங்களுக்கு முன்பு, மேற்குவங்க மாநிலம் வடக்கு 24 பா்கானாஸ் பகுதியில் சென்ற முதலமைச்சர் மம்தா பானர்ஜி, அவரது காரின் முன்பு"ஜெய் ஸ்ரீராம்" என கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் கோபமடைந்த மம்தா, காரை விட்டு இறங்கி கோஷமிட்டவர்களை கண்டித்தார்.

மேலும், கோஷம் எழுப்பியவர்கள் மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்கள் அல்ல என்றும், அவர்கள் குற்றவாளிகள் என்றும், தன்னிடம் வேண்டுமென்றே வம்பு செய்வதாகவும் தெரிவித்தார். இதனையடுத்து, 10 பாஜக தொண்டர்களை போலீசார் கைது செய்தனர்.
இதற்கு கண்டனம் தெரிவித்த பாஜக எம்பி அர்ஜூன்சிங், மம்தாவுக்கு 10 லட்சம் பேர் அஞ்சல்அட்டைகளில் ஜெய்ஸ்ரீராம் என எழுதி தொண்டர்கள் அனுப்புவார்கள் என்றும் 10 பேரை கைது செய்தது போல் முடிந்தால் 10 லட்சம் பேரை கைது செய்துபாருங்கள் என்று சவால் விடுத்துள்ளார்.
இந்தநிலையில், ஜெய் ஸ்ரீ ராம் கோஷங்கள் திரிணாமுல் காங்கிரஸின் கட்சி கூட்டத்தில் மீண்டும் ஒலித்தது. பாராக்பூர் தொகுதியான, காஞ்சாப்பாரா பகுதியில், அமைச்சர்கள் தலைமையிலான கட்சி கூட்டத்திற்கு, சுமார் 200 அடி தூரத்தில் ஜெய் ஸ்ரீ ராம் கோஷம் எழுப்பப்பட்டது.
இதனையடுத்து, மோதலை தடுக்கும விதமாக, காவல்துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர். அமைச்சர்கள் ஜோதிப்ரியோ மல்லிக் மற்றும் தபோச் ராய் ஆகியோர் பொது கூட்டம் நடந்த இடத்தை விட்டு சென்றதும், பாஜக ஆதாரவாளர்கள் 15 நிமிடங்கள் காஞ்சாப்பாரா ரயில் நிலையத்தில் ரயில்களை நிறுத்தினர். இதனை தொடர்ந்து, கைது செய்யப்பட்ட 10 பாஜக தொண்டர்களை உடனே விடுதலை செய்ய கோரி, காவல் நிலையத்திற்கு வெளியே தர்ணாவில் ஈடுபட்டனர்.
இந்த தர்ணாவில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றனர். மம்தா பானர்ஜி எங்கு சென்றாலும் ஜெய் ஸ்ரீராம் கோஷத்தை எழுப்பி, பாஜகவினர் தங்களது எதிர்ப்பினை தெரிவித்தபடியே இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications