மேகாலயா சிறைக்குள் கேக்கில் மறைத்து கடத்தப்பட்ட கைப்பேசி.. அதிகாரிகள் பறிமுதல்!

Subscribe to Oneindia Tamil

ஷில்லாங்: மேகாலயாவில் கேக்குக்குள் மறைத்து கைதிக்கு அனுப்பப் பட்ட செல்போனை சிறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மேகாலயா மாநிலம் மேற்கு காரோ மலை மாவட்டத்தில் உள்ள சிறையில் பன்சங் எம்.மரக் என்ற குற்றவாளி அடைக்கப் பட்டிருந்தார். நேற்று அவரைப் பார்க்க தெங்சராங் மரக் என்ற பார்வையாளர் சிறைக்கு சென்றார்.

Jail authorities detect mobile handset hidden under cake

அப்போது அவர் பன்சங்கிற்கு சில தின்பண்டங்களையும் எடுத்துச் சென்றிருந்தார். சந்தேகத்தின் பேரில் அவற்றை சிறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

அப்போது கேக் ஒன்றின் கீழே செல்போன் ஒன்று மறைத்து வைக்கப் பட்டிருந்தது கண்டுபிடிக்கப் பட்டது. அதனைத் தொடர்ந்து, அந்த செல்போனைப் பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

முதல்கட்ட விசாரணையில், பறிமுதல் செய்யப்பட்ட செல்போன் சிறை உள்ளே இருக்கும் விசாரணைக் கைதியான வில்லியம் சங்மா எனும் தீவிரவாதிக்காகக் கொண்டு வரப்பட்டதாக தெரிய வந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+