சிறை வாசலில் விரதமிருந்த மக்கள்: அசாராம் அளித்த புனித நீரை விநியோகித்த போலீஸ்

குஜராத் மாநிலம், அகமதாபாத்தைச் சேர்ந்த சாமியார் அசாராம் பாபு. இவருக்கு ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆசிரமம் மற்றும் அறக்கட்டளை அலுவலகங்கள் இருக்கின்றன.
சமீபத்தில் அவருடைய ஜோத்பூர் ஆசிரமத்தில் தங்கியிருந்த உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த 16 வயது இளம்பெண் ஒருவர் டெல்லி போலீசில் அளித்த புகாரின் அடிப்படையில், சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு, தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் அசாராம் பாபு.
இந்நிலையில் பௌர்ணமி நாளான நேற்று அசாரம் பாபு அடைக்கப்பட்டுள்ள ஜோத்பூர் மத்திய சிறைமுன் அவரது ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கில் குவிந்தனர். அசாராம் பாபுவை தரிசனம் செய்ய வந்திருப்பதாக அவர்கள் காவல் துறையினரிடம் தெரிவித்தனர்.
சிறையில் உள்ள ஒரு நபரை மக்கள் பார்பதற்காக அழைத்து வர இயலாது என்பதை காவலர்கள் எடுத்துக் கூறியும் அவர்கள் கலைந்து செல்ல மறுத்தனர். கைகளில் பூஜைப் பொருட்களுடன் வந்திருந்த அவர்கள், தாங்கள் காலை முதல் அசாராம் பாபுவைப் பார்ப்பதற்காக விரதம் இருப்பதாகவும், அதனால் அவர் கைகளால் தொட்டுத் தரும் புனித நீரையாவது பெற்றுத் தருமாறு வேண்டினர்.
அதனைத் தொடர்ந்து, தனி மனிதர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் எனக் கருதிய சிறை அதிகாரி ஷர்மா, அசாராமிடமிருந்து புனித நீரை பெற்று வந்து போலீசாரை விட்டு அவர்களுக்கு விநியோகிக்கச் செய்தார்.












Click it and Unblock the Notifications