அருண்ஜேட்லிக்கு எதிரான கிரிக்கெட் சங்க ஊழல் பைல்களை எடுக்கத்தான் சி.பி.ஐ. சோதனை: கேஜ்ரிவால் 'திடுக்'

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லி கிரிக்கெட் சங்க ஊழலில் நிதி அமைச்சர் அருண் ஜேட்லிக்கு தொடர்பிருப்பதற்கு ஆதாரமான கோப்புகளை கைப்பற்றத்தான் தமது அலுவலகத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தியதாக டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார்.

டெல்லி முதன்மை செயலாளர் ராஜேந்திர குமார் மீதான ஊழல் புகார் குறித்த விசாரணைக்காக டெல்லி தலைமை செயலகம் மற்றும் முதல்வர் கேஜ்ரிவால் அலுவலகங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். நாடு முழுவதும் இந்த சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Jaitley scared of DDCA scam probe: Kejriwal on CBI raid

சி.பி.ஐ.-ன் இந்த சோதனை நடவடிக்கைக்கு மிகக் கடுமையான எதிர்ப்பை கேஜ்ரிவால் பதிவு செய்து வருகிறார். இந்த நிலையில் ராஜேந்திரகுமார் மீதான வழக்குக்குத் தொடர்பே இல்லாத பல கோப்புகளையும் சி.பி.ஐ. அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாகவும் அதில் நிதி அமைச்சர் அருண் ஜேட்லிக்கு எதிரான டெல்லி கிரிக்கெட் சங்க ஊழல் தொடர்பான கோப்புகளும் அடக்கம் என்றும் கேஜ்ரிவால் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக கேஜ்ரிவால் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது:

என்னுடைய அலுவலகத்தில் இருந்தும் கோப்புகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சி.பி.ஐ. சொல்லும் குற்றச்சாட்டுகளுக்கு தொடர்பில்லாத டெல்லி கிரிக்கெட் சங்க கோப்புகளும் ஆய்வு செய்யப்பட்டுள்ளன.

இதை நான் ஊடகங்களில் சொல்லிக் கொண்டிருக்கும் போது என் அலுவலகத்தை விட்டு வெளியேறிவிட்டார்கள். அந்த கோப்புகளை அவர்கள் எடுத்துச் சென்றார்களா என்பதை இனி பார்க்க வேண்டும்.

இவ்வாறு கேஜ்ரிவால் கூறினார்.

ஆனால் இதனை அருண்ஜேட்லி நிராகரித்துள்ளார். கேஜ்ரிவாலின் அவதூறுகளுக்கு எல்லாம் பதிலளிக்க விரும்பவில்லை என ஜேட்லி கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+