ஜல்லிக்கட்டுக்கு தடை கேட்கிறது விலங்குகள் நல வாரியம்.. அப்போ சிவசேனாதிபதி சொன்னது பொய்யா?
கார்த்திகேய சிவசேனாதிபதி கூறுகையில், விலங்குகள் நலவாரியம் ஜல்லிக்கட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்காது. இனிமேல் பிரச்சினை இல்லை என்று அடித்துக் கூறியிருந்தார்.
டெல்லி: ஜல்லிக்கட்டு தொடர்பான தமிழக அரசின் அவசரச் சட்டத்திற்கு எதிராக விலங்குகள் நல வாரியம், பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளன. மேலும் ஜல்லிக்கட்டு தொடர்பாக வெளியான அறிவிக்கைகளை ரத்து செய்த மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராகவும் இவை மனு தாக்கல் செய்துள்ளன.
இதில் கவனிக்கப்பட வேண்டியது, விலங்குகள் நல வாரியம் என்பது மத்திய அரசின் கீழ் இயங்கும் ஒரு தன்னாட்சி அமைப்பாகும். இந்த அமைப்பு மத்திய அரசின் விருப்பத்திற்கு மாறாக தமிழக அரசின் சட்டத்தை எதிர்க்கிறது.
பிரதமர் மோடியே தமிழர் கலாசாரத்திற்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும் என்று அறிவித்துவிட்ட நிலையிலும், அரசின் கீழ் செயல்படும் ஒரு அமைப்பு தமிழக விருப்பத்திற்கு மாறாக முறையீடு செய்துள்ளது கவனிக்கத்தக்கது.

இரட்டை நிலை
ஒரே குடும்பத்தின் ஆதிக்கத்தில் விலங்குகள் நல வாரியம் இருப்பதாக ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் குற்றம்சாட்டிய பின்னணியில் இந்த நடவடிக்கையை பார்க்க வேண்டியுள்ளது. அல்லது மத்திய அரசு தொட்டிலை ஆட்டிவிட்டுவிட்டு, பிள்ளையை இப்போது கிள்ளிவிட்டதா என்ற சந்தேகமும் ஏற்படாமல் இல்லை.

எதிர்ப்பு தெரிவிக்காது
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு செய்தியாளர்களுக்கு காங்கேயம் மாடுகள் ஆராய்ச்சி மைய தலைவர் கார்த்திகேய சிவசேனாதிபதி, ஹிப்ஹாப் ஆதி உள்ளிட்ட ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் பேட்டியளித்தனர்.அப்போது கார்த்திகேய சிவசேனாதிபதி கூறுகையில், விலங்குகள் நல வாரிய தலைவரை ஒரு வாரத்திற்கு முன்பே மாற்றி விட்டார்கள். எனவே இனிமேல் ஜல்லிக்கட்டு தொடர்பாக விலங்குகள் நலவாரியம் எதிர்ப்பு தெரிவிக்காது. இனிமேல் பிரச்சினை இல்லை என்று அடித்துக் கூறியிருந்தார்.

தடியடி
இருப்பினும் போராட்டக்காரர்கள் அந்த பேச்சை நம்பி கலைந்து செல்ல மறுத்தனர். இதற்கு மறுநாள் போலீசார் திடீரென மெரினாவிலும் பிற இடங்களிலும் போராட்டக்காரர்களை தடியடி நடத்தி கலைத்தனர். ஆனால், அவரது பேட்டிக்கு நேர் எதிர்மாறாக, போராட்டக்காரர்கள் சந்தேகப்பட்டபடியே இப்போது விலங்குகள் நல வாரியம் தமிழக அரசின் அவசர சட்டத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டை அணுகியுள்ளது. அறிவிக்கை வழக்கிலாவது ஏற்கனவே விலங்குகள் நல வாரியம் ஒரு அங்கம் என்பதால் அதை எதிர்ப்பதில் லாஜிக் உள்ளது. ஆனால் தமிழக அரசின் சட்டத்தையும் சுப்ரீம் கோர்ட்டில் எதிர்ப்பது ஏன் என்பது பெரும் கேள்வி.

தெளிவுபடுத்த வேண்டும்
கார்த்திகேய சிவசேனாதிபதி போராட்டத்தை கலைக்க கூறிய பசப்பு வார்த்தைகள் இப்போது பலிக்கவில்லை. அவரிடம் அதுபோன்ற ஒரு உறுதியை தெரிவித்து பேட்டியளிக்க கூறியது யார்? அதன் நோக்கம் என்ன என்பதை கார்த்திகேய சிவசேனாதிபதிதான் தெளிவுபடுத்த வேண்டும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications