அண்ணன்டா.. தம்பிடா... ஜல்லிக்கட்டுக்காக பெங்களூரில் தமிழர்களுடன் கைகோர்த்து திரண்ட கன்னடர்கள்!
ஜல்லிக்கட்டுக்காக பெங்களூரு டவுன் ஹாலில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்தில் தமிழருடன் கன்னடர்களும் கை கோர்த்து முழக்கம் எழுப்பினர்.
பெங்களூரு: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கர்நாடகா மாநில தலைநகர் பெங்களூருவிலும் ஆயிரக்கணக்கானோர் ஒன்று திரண்டு போராட்டத்தை நடத்தின வருகின்றனர். பெங்களூரு டவுன்ஹால் முன்பாக தமிழர்களுடன் கன்னடர்களும் கைகோர்த்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தமிழரின் பண்பாட்டு அடையாளம் ஜல்லிக்கட்டு. இதற்கு விதிக்கப்பட்ட தடையால் தமிழகமே கொந்தளிப்பு வரலாறு காணாத புரட்சியில் இறங்கியுள்ளது.
தமிழக மக்களுக்கு ஆதரவு தெரிவித்து உலகின் பல நாடுகளிலும் தமிழர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இலங்கையின் யாழ்ப்பாணத்திலும் போராட்டம் நடைபெற்றது.

பெங்களூருவில் போராட்டம்
மணிப்பூரின் மோரே நகரிலும் தமிழர்கள் போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் கர்நாடகா மாநிலம் பெங்களூருவிலும் தமிழர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

சமூக வலைதள அழைப்பு
பெங்களூரு டவுன்ஹால் முன்பாக ஒன்று திரள சமூக வலைதளங்களின் மூலமாக அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த அழைப்பை ஏற்று ஆயிரக்கணக்கானோர் டவுன் ஹால் முன்பு குவிந்தனர்.

கைகோர்த்த கன்னடர்கள்
தமிழ், கன்னட அமைப்பினர் கை கோர்த்து இப்போராட்டத்தில் இணைந்தனர். இளைஞர்கள், ஐடி பணியாளர்கள் ஏராளமானோர் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக களமிறங்கி முழக்கமிட்டனர்.

போலீஸ் அனுமதி மறுப்பு
முதலில் இந்த போராட்டத்துக்கு பெங்களூரு போலீசார் அனுமதி கொடுத்தனர். பின்னர் அனுமதி மறுத்துவிட்டனர். பின்னர் போலீசார் 1 மணிநேரம் மட்டும் போராட அனுமதித்தனர். இதன்பின்னர் அனைவரையும் கலைந்து போக உத்தரவிட்டனர்.

திருவள்ளுவர் சிலை முன்பாக
இதனிடையே பெங்களூரு உல்சூரில் திருவள்ளுவர் சிலை முன்பாக ஞாயிற்றுக்கிழமையன்று ஒன்று திரளவும் தமிழ் அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.












Click it and Unblock the Notifications