காஷ்மீரில் ராணுவம் சுட்டதில் 7 பொதுமக்கள் பலி.. பதற்றம்

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீநகர்: காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் சுட்டதில் 7 பொது மக்கள் பலியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் சிமூ என்ற கிராமத்தில், தீவிரவாதிகளை தேடும் வேட்டையில் பாதுகாப்பு படையினர் இன்று ஈடுபட்டனர். வீடு வீடாக பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது, பாதுகாப்பு படையினர் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படை பதிலடி கொடுத்தது.

Jammu Kashmir: 3 terrorists, 1 soldier, 7 civilians killed in encounter in Pulwama

இந்த துப்பாக்கி சண்டையில், 3 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். இதில் ராணுவ ஒருவர் ஒருவர் வீர மரணம் அடைந்தார். 2 வீரர்கள் காயமடைந்தனர்.

இதையடுத்து அந்த பகுதியில் கூடுவதற்கு பொதுமக்களுக்கு தடை விதித்தனர் பாதுகாப்பு படையினர். ஆனால் பாதுகாப்பு படை நடவடிக்கையை எதிர்த்து பொதுமக்களில் சிலர் ராணுவத்தினரை முற்றுகையிட்டனர்.

இதையடுத்து ராணுவத்தினர் வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தி எச்சரிக்கை விடுத்தனர். ஆனால், மோதல் தொடர்ந்ததால் பொதுமக்களை நோக்கி பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 7 பேர் பலியாகினர்.

பாதுகாப்புப் படை தாக்குதலுக்கு மெகபூபா முஃப்தி மற்றும் ஃபருக் அப்துல்லா உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+