காஷ்மீரில் மீண்டும் சோகம்.. தீவிரவாதிகளுக்கு எதிரான துப்பாக்கிச் சண்டையில் 4 ராணுவ வீரர்கள் பலி
Recommended Video

ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில், இன்று அதிகாலை, தீவிரவாதிகளுக்கு எதிராக பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர். இதில் 4 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.
புல்வாமா மாவட்டத்தின் பின்க்ளான் என்ற பகுதியில், பதுங்கியிருந்த தீவிரவாதிகளுக்கு எதிராக இன்று அதிகாலை பாதுகாப்பு படையினர் சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தினர்.

இதையடுத்து 2 தீவிரவாதிகள், ராணுவத்தால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள், கடந்த 14ம் தேதி, சிஆர்பிஎஃப் ஜவான்கள் மீது தாக்குதல் நடத்தி, 40 பேர் கொல்லப்பட காரணமாக இருந்த ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின், அதில் அகமது தார் என்பவருடன் தொடர்புள்ளவர்கள் என்று கூறப்படுகிறது.
இந்த தாக்குதலின்போது, 4 ராணுவ வீரர்கள் காயமடைந்தனர். அவர்கள், ஸ்ரீநகரிலுள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலனின்றி, 4 வீரர்களும் பலியாகினர்.
எதிர்தரப்பில் 1 தீவிரவாதி கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், அரசு தரப்பில் இந்த மரணம் தொடர்பாக இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை.
கடந்த சனிக்கிழமை, பாகிஸ்தான் எல்லையில் வெடிகுண்டு தாக்குதலில் இந்திய ராணுவ மேஜர் ஒருவர் பலியாகியிருந்த நிலையில், இன்றைய சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், இந்த தாக்குதல்கள் துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு! -
எக்சிட் பிளான் இல்லை.. டிரம்பிற்கு 'நரகமாக' மாறும் ஈரான்.. அணு ஆயுதத்தை கையில் எடுக்கும் அமெரிக்கா!












Click it and Unblock the Notifications