ஜம்மு காஷ்மீர் தேர்தலில் செம்ம ட்விஸ்ட்.. பாஜக, காங்கிரஸ் மாநில தலைவர்கள் படு தோல்வி!
ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலில் தேசிய மாநாட்டுக் கட்சி- காங்கிரஸ் கூட்டணி பெரும்பான்மைக்கு தேவையான 46 இடங்களை விட கூடுதல் தொகுதிகளில் வென்றுள்ளது. பாஜக 29 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் ஜம்மு காஷ்மீர் மாநில பாஜக தலைவர் ரவீந்தர் ரைனா, ஜம்மு காஷ்மீர் மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவ்ர் தாராசந்த் ஆகியோர் தேர்தலில் படுதோல்வியை சந்தித்துள்ளனர்.
2019-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு மட்டும் சட்டசபை உருவாக்கப்பட்டது. லடாக் யூனியன் பிரதேசத்துக்கு சட்டசபை இல்லை.

உச்சநீதிமன்றத்தின் நெர்க்கடியால் தற்போது ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபை தேர்தல் 3 கட்டங்களாக நடத்தப்பட்டது. இன்று காலை முதல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
ஜம்மு காஷ்மீரில் தொடக்கம் முதலே தேசிய மாநாட்டுக் கட்சி- காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை வகித்தது. தேசிய மாநாட்டுக் கட்சி- காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைப்பதற்கான 46 இடங்களைவிட கூடுதலான இடங்களைப் பெற்றிருக்கிறது. பாஜக 29 தொகுதிகளிலும் வென்றுள்ளது.
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் முதலாவது ஆட்சியை தேசிய மாநாட்டுக் கட்சி- காங்கிரஸ் அமைக்க இருக்கிறது. காங்கிரஸைவிட பாஜக தனித்து போட்டியிட்டு அதிக இடங்களைக் கைப்பற்றி இருக்கிறது. இதனால் காங்கிரஸும் ஆட்சி அமைக்கிறோம் என்ற மகிழ்ச்சியில் இருக்கிறது. பாஜகவுக்கும் காங்கிரஸைவிட அதிக இடங்களில் வென்றுளோம் என மகிழ்வடைகிறது.
ஆனால் இந்த தேர்தலில் வினோதம் ஒன்றும் நிகழ்ந்துள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநில பாஜக மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் இருவருமே தாங்கள் போட்டியிட்ட்ட தொகுதிகளில் தோல்வியைத் தழுவினர். நவ்செரா தொகுதியில் பாஜக மாநிலத் தலைவர் ரவீந்தர் ரைனா போட்டியிட்டார். இத்தொகுதியில் தேசிய மாநாட்டுக் கட்சி வேட்பாளர் சுரிந்தர் குமார் சவுத்ரியிடம் 7819 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார் ரவீந்தர் ரைனா.
அதேபோல சாம்ப் சட்டசபை தொகுதியில் மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் தாரா சந்த் போட்டியிட்டார். இத்தொகுதியில் 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டு பரிதாப தோல்வியைத் தழுவினார் தாரா சந்த். சாம்ப் தொகுதியில் சுயேட்சை வேட்பாளரான சதீஷ் சர்மா 33985 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
பாஜகவின் ராஜீவ் சர்மா 27056 வாக்குகளும் காங்கிரஸ் தலைவர் தாரா சந்த் வெறும் 16449 வாக்குகளையும் பெற்று தோல்வியைத் தழுவினர். ஜம்மு காஷ்மீரில் இரு பெரும் கட்சிகளின் மாநில தலைவர்களுக்கு வாக்காளர்கள் தோல்வியையே பரிசாக கொடுத்திருப்பது அக்கட்சியினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications