ஜம்மு காஷ்மீர் என்கவுண்ட்டர்: ஜெய்ஷ் இ முகமது தளபதி ஷாகித் வானி உட்பட 5 பேர் சுட்டுக் கொலை
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் என்கவுண்ட்டரில் ஜெய்ஷ் இ முகமது தளபதி ஷாகித் வானி உட்பட 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் பட்காம், புல்வாமா பகுதிகளில் பயங்கரவாதிகள் ஊடுருவியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல்கள் கிடைத்தன. இதனையடுத்து அப்பகுதிகளில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டனர்.

இருவேறு பகுதிகளில் பாதுகாப்பு படையினர் தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டனர். அப்போது பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தினர். இதற்கு பாதுகாப்புப் படை தரப்பில் இருந்து பதிலடி தரப்பட்டது.
Recommended Video
இரு இடங்களிலும் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையேயான மோதல் பல மணிநேரம் நீடித்தது. இம்மோதலில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். சுட்டுக்கொல்லப்பட்டவர்களில் ஒருவர் ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தின் தளபதிகளில் ஒருவரான ஷாகித் வானி என அடையாளம் காணப்பட்டது. இதர 4 பேரும் பாகிஸ்தானை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தினர் என பாதுகாப்புப் படை வட்டாரங்கள் தெரிவித்தன.












Click it and Unblock the Notifications