பல காலமாக தேடப்பட்டு வந்த தீவிரவாதி.. காஷ்மீரில் அதிரடி கைது
ஸ்ரீநகர்: இளைஞர்களுக்கு மூளை சலவை செய்து, தீவிரவாதிகளாக மாற்றி வந்த முக்கிய தீவிரவாதி ரையாஸ் அகமது கைது செய்யப்பட்டான்.
ஜம்மு காஷ்மீரின் எல்லை வழியாக தீவிரவாதிகள் ஊடுருவும் சம்பவங்கள் அவ்வப்போது நடக்கின்றன. மேலும், இளைஞர்களுக்கு பணத்து ஆசை தவிர, மதம் சார்ந்த உணர்வுகளை ஊட்டி, தீவிரவாதிகளாக மாற்றும் வேலைகளில் தீவிரவாதிகள் ஈடுபட்டுள்ளனர்.

அவ்வாறு அழைத்துச் செல்லப்படும் இளைஞர்களுக்கு ராணுவம் போல, தீவிரவாத பயிற்சி அளிக்கப்படுகிறது. பலர் தற்கொலை படையாகவும் மாற்றப்படுகின்றனர். சிறுவர்கள் கூட இந்த சதி திட்டங்களுக்கு பயன்படுத்தபடுவது வேதனையின் உச்சம்.
இந்தநிலையில், ஜம்மு காஷ்மீர் போலீசாரால் தேடப்பட்டு வந்த தீவிரவாதி, ரையாஸ் அகமதுவை இன்று ஸ்ரீநகரில் சுற்றிவளைத்து கைது செய்தனர்.
முன்னதாக, ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதில், 5 பாதுகாப்பு படையினர் காயமடைந்தனர். பாதுகாப்பு படையினர் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications