"இதுதான் முடிவு.." பாகிஸ்தானிலிருந்து சீக்ரெட் மெசேஜ் உடன் வந்த புறா.. மடக்கி பிடித்த ராணுவம்! ஷாக்
ஸ்ரீநகர்: பாகிஸ்தான் எல்லையில் இருந்து காலில் துண்டுச் சீட்டுடன் புறா ஒன்று திடீரெனப் பறந்து வந்துள்ளது. அந்தப் புறாவைப் பிடித்துப் பாதுகாப்புப் படையினர் சோதனை நடத்திய போது அதில் பகீர் மெசேஜ் ஒன்று இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. அதாவது காஷ்மீரில் மிகப் பெரிய குண்டுவெடிப்பு நடக்கும் என அதில் கூறப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் அங்குப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அங்குள்ள ரயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
பஹல்காம் தாக்குதல் நடந்தது முதலே இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றம் இருக்கிறது. இரு நாடுகளுக்கும் இடையே மோதல் இல்லை என்றாலும் கூட பாகிஸ்தான் நடவடிக்கைகளை இந்தியா உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. எல்லை தாண்டி வரும் தீவிரவாதிகள் உள்ளிட்ட ஊடுருவல்களை இந்தியா தீவிரமாகக் கவனித்து வருகிறது.

இந்தியா பாகிஸ்தான் எல்லை
இதற்கிடையே இந்தியா பாகிஸ்தான் எல்லையில் பறந்த வந்த புறாவில் இருந்த மெசேஜ் பெரும் பரபரப்பைக் கிளப்புவதாக இருக்கிறது. அதாவது அந்தப் புறாவில் ஜம்முவில் ரயில் நிலையம் மீது மிக மோசமான தாக்குதல் நடத்தப்படும் என மிரட்டல் குறிப்பு இருந்துள்ளது. இந்தப் புறா இந்திய-பாகிஸ்தான் எல்லைக்கு அருகே பிடிபட்டது. இதையடுத்து ஜம்மு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனர்.
இந்தியா பாகிஸ்தான் எல்லை எப்போதும் மிக மிக உன்னிப்பாகக் கவனிக்கப்படும். பாகிஸ்தானில் இருந்து எல்லை வழியாகத் தீவிரவாதிகள் ஊடுருவுவதை தடுக்க அதிகபட்ச வீரர்கள் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டிருப்பார்கள். சமீப காலமாகத் தீவிரவாதிகள் மட்டுமின்றி டிரோன்களும் கூட ஊடுருவ முயல்கின்றன. இதனால் கண்காணிப்பு மிகத் தீவிரமாகவே இருந்து வருகிறது.
எல்லையில் வந்த புறா
இந்தச் சூழலில் தான் புறா ஒன்று பாகிஸ்தான் எல்லையில் இருந்து வந்துள்ளது. அந்தப் புறாவின் கால்களில் ஏதோ துண்டுச் சீட்டு இருந்த நிலையில், அதைக் கவனித்த பாதுகாப்புப் படை வீரர்கள் அதைப் பிடிக்க முயன்றுள்ளனர். ஜம்முவிலிருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆர்.எஸ். புறா பகுதியில் புறாவை எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் பிடித்தனர்.
குண்டுவெடிப்பு மிரட்டல்
அதன் காலில் கட்டப்பட்டிருந்த ஒரு துண்டுச் சீட்டில் குண்டுவெடிப்பு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. அதில் ஜம்மு தாவி ரயில் நிலையத்தில் வரும் நாட்களில் வெடிகுண்டுத் தாக்குதல் (IED blast) நடத்தப்படும் என்ற அச்சுறுத்தும் செய்தி இருந்தது. உருது மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளிலும் அது எழுதப்பட்டு இருந்தது. உருது மொழியில் "காஷ்மீர் எங்களுடையது, நேரம் வந்துவிட்டது" என்ற வாசகம் இருந்தது. ஆங்கிலத்தில் "ஜம்மு ஸ்டேஷன் ஐஇடி குண்டுவெடிப்பு.. இதுவே முடிவு" என்றும் எழுதப்பட்டிருந்தது.
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா ஆபரேஷன் சிந்தூரை நடத்தியிருந்தது. அதன் பிறகு எல்லையில் பல சமயங்களில் தீவிரவாதிகள் நுழைய முயன்ற நிலையில், நமது பாதுகாப்புப் படை வீரர்கள் அந்த ஊடுருவல் முயற்சியை வெற்றிகரமாக முறியடித்தனர்.
பரபரப்பு
இந்தச் சூழலில் தான் மிரட்டல் சீட்டுடன் புறா பிடிக்கப்பட்டது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இதையடுத்து ஜம்மு தாவி ரயில் நிலையம் மற்றும் அப்பகுதியிலுள்ள மற்ற முக்கியமான இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதேநேரம் இது உண்மையான மிரட்டலா இல்லை யாராவது விஷமிகள் சும்மா அனுப்பிய மிரட்டலா என்ற கோணத்திலும் அதிகாரிகள் விசாரணையில் இறங்கியுள்ளனர்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications