ஜம்மு காஷ்மீரில் குறைந்துள்ள தீவிரவாதிகள் எண்ணிக்கை – மத்திய அமைச்சர் கிரண் ரஜ்ஜூ
டெல்லி: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து லோக்சபாவில் மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரஜ்ஜூ உரையாற்றினார்.
அப்போது, "ஜம்மு காஷ்மீரில் 1996 இல் பல்வேறு பயங்கரவாத அமைப்புகளை சேர்ந்த 6800 பேர் நாச வேலைகளில் ஈடுபட்டனர். இது படிப் படியாக குறைந்து தற்போது அங்கு 199 பயங்கரவாதிகள் மட்டுமே உள்ளனர்.

மும்பையிலிருந்து ஈராக் நாட்டிற்கு சென்ற மகாராஷ்டிரா மாநில இளைஞர்கள் நான்கு பேர் மாயமாகியுள்ளனர். இவர்கள் அங்குள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பில் இணைந்துள்ளனரா என சந்தேகிக்கப்படுகிறது.
அந்த நால்வரில் ஒருவர் ஈராக் புறப்படும் முன் வீட்டில் தன் பெற்றோருக்கு எழுதி வைத்த கடிதத்தில் "நான் மத கடமை ஆற்றச் செல்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.
குழுவினருடன் இருந்த இளைஞர்கள் அங்கிருந்து வாடகை கார் மூலம் மொசூல் நோக்கி சென்றதாக குழுவில் இருந்த சிலர் தெரிவித்துள்ளனர். இதனால் அவர்கள் தீவிரவாத அமைப்பில் இணைந்திருக்கலாம் என்று சந்தேகம் வலுத்துள்ளது" என்றும் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications