ரகசிய அரசாங்கம் நடத்துகிறார் ஜெகன்...பவன் கல்யான் ஆவேசம்
Recommended Video
அமராவதி: ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஆட்சிப்பொறுப்பேற்று 100 நாட்களை கடந்துவிட்ட நிலையில், அரசு நிர்வாகம் செயலிழந்து விட்டதாக ஜனசேனா கட்சித் தலைவரும், நடிகருமான பவன் கல்யான் தெரிவித்துள்ளார்.
ஆந்திராவில் கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அறுதிப்பெரும்பான்மையோடு வெற்றிபெற்று ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தார் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி. ஆட்சிக்கு வந்து 100 நாட்கள் மட்டுமே கடந்துள்ள நிலையில் அவரது அதிரடியான நடவடிக்கைகள் மூலம் அண்டை மாநில அரசியவாதிகளின் கவனத்தை பெற்றார்.

பல கோடி ரூபாய் அரசு செலவில் கட்டப்பட்ட குடியிருப்பை இடித்தது, கிராம பஞ்சாயத்து அலுவலகங்கள், இடுகாடு சுற்றுச்சுவர்களுக்கு ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் கொடி வண்ணத்தை பூசியது, உள்ளிட்டவைகள் அவர் மீதுள்ள குற்றச்சாட்டுகள். இந்நிலையில், இன்று ஆந்திர அரசின் 100 நாள் செயல்பாடு குறித்து செய்தியாளர்களை சந்தித்த ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யான், ஜெகன் மோகன் மீது சரமாரி குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது; ஜெகனின் நடவடிக்கைகளை, செயல்பாடுகளை கவனித்து வந்தேன். போதிய நேரமும், காலமும் அளித்தும் ஜெகன் அரசு எதையும் உருப்படியாக செய்யவில்லை. தேர்தலுக்கு முன்பு ஜெகன் மோகன் ரெட்டி மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கையை இப்போது அவர் இழந்துவிட்டார். கல்வி, விவசாயம், என அனைத்து துறைகளிலும் வளர்ச்சிப்பணிகள் நடந்திருக்கிறதா என்றால், ஏமாற்றம் மட்டுமே மிஞ்சுகிறது
அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மை தேவை. நிதி தொடர்பான விவரங்களை ஆந்திர அரசு தனது இணையதள பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளது. ரகசியமான முறையில் அரசாணைகளை பிறப்பிக்கிறார் ஜெகன் மோகன் ரெட்டி. இதுவரை எனக்குத்தெரிந்து 60 அரசாணைகள் ரகசிய முறையில் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
அரசு நிர்வாகத்தை பற்றி மக்கள் அறிந்துகொள்ள வேண்டியது பொதுமக்களின் அடிப்படை உரிமை.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications