ரகசிய அரசாங்கம் நடத்துகிறார் ஜெகன்...பவன் கல்யான் ஆவேசம்
Recommended Video
அமராவதி: ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஆட்சிப்பொறுப்பேற்று 100 நாட்களை கடந்துவிட்ட நிலையில், அரசு நிர்வாகம் செயலிழந்து விட்டதாக ஜனசேனா கட்சித் தலைவரும், நடிகருமான பவன் கல்யான் தெரிவித்துள்ளார்.
ஆந்திராவில் கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அறுதிப்பெரும்பான்மையோடு வெற்றிபெற்று ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தார் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி. ஆட்சிக்கு வந்து 100 நாட்கள் மட்டுமே கடந்துள்ள நிலையில் அவரது அதிரடியான நடவடிக்கைகள் மூலம் அண்டை மாநில அரசியவாதிகளின் கவனத்தை பெற்றார்.

பல கோடி ரூபாய் அரசு செலவில் கட்டப்பட்ட குடியிருப்பை இடித்தது, கிராம பஞ்சாயத்து அலுவலகங்கள், இடுகாடு சுற்றுச்சுவர்களுக்கு ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் கொடி வண்ணத்தை பூசியது, உள்ளிட்டவைகள் அவர் மீதுள்ள குற்றச்சாட்டுகள். இந்நிலையில், இன்று ஆந்திர அரசின் 100 நாள் செயல்பாடு குறித்து செய்தியாளர்களை சந்தித்த ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யான், ஜெகன் மோகன் மீது சரமாரி குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது; ஜெகனின் நடவடிக்கைகளை, செயல்பாடுகளை கவனித்து வந்தேன். போதிய நேரமும், காலமும் அளித்தும் ஜெகன் அரசு எதையும் உருப்படியாக செய்யவில்லை. தேர்தலுக்கு முன்பு ஜெகன் மோகன் ரெட்டி மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கையை இப்போது அவர் இழந்துவிட்டார். கல்வி, விவசாயம், என அனைத்து துறைகளிலும் வளர்ச்சிப்பணிகள் நடந்திருக்கிறதா என்றால், ஏமாற்றம் மட்டுமே மிஞ்சுகிறது
அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மை தேவை. நிதி தொடர்பான விவரங்களை ஆந்திர அரசு தனது இணையதள பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளது. ரகசியமான முறையில் அரசாணைகளை பிறப்பிக்கிறார் ஜெகன் மோகன் ரெட்டி. இதுவரை எனக்குத்தெரிந்து 60 அரசாணைகள் ரகசிய முறையில் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
அரசு நிர்வாகத்தை பற்றி மக்கள் அறிந்துகொள்ள வேண்டியது பொதுமக்களின் அடிப்படை உரிமை.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications