35 வயது ஜப்பான் பெண் பாலியல் பலாத்காரம்.. கேரளாவில் அதிர்ச்சி .. கர்நாடக இளைஞர் கைது
திருவனந்தபுரம் அருகே ஜப்பான் சுற்றுலாப் பயணியை பாலியல் பலாத்காரம் செய்த 24 வயது கர்நாடக இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் அருகே கோவளம் பகுதியில் 35 வயது ஜப்பானிய பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த கர்நாடகத்தைச் சேர்ந்த 25 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அந்த நபரின் பெயர் தேஜா. இவர் கர்நாடகத்தைச் சேர்ந்தவர். இவரது குடும்பத்தினர் கோவளம் பகுதியில் கைவினைப் பொருட்கள் விற்பனை நிலையத்தை நடத்தி வருகின்றனர். தேஜா மீது கோவளம் போலீஸில் அந்த ஜப்பானியப் பெண் ஒரு புகார் கொடுத்தார். அதில், தான் தங்கியிருந்த ஹோட்டல் அறைக்குள் நுழைந்த தேஜா தன்னை கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்து வி்ட்டதாக கூறியிருந்தார்.
இதையடுத்து போலீஸார் அப்பெண்ணை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து போலீஸார் தேஜாவைக் கைது செய்தனர்.
இந்தப் பெண் சுற்றுலவாக வெள்ளிக்கிழமைதான் கோவளத்திற்கு வந்தார். சனிக்கிழமை இரவு பலாத்காரச் சம்பவம் நடந்துள்ளது.