பாஜகவில் இருந்து சஸ்பென்ட் ஆன ஜஸ்வந்த்சிங் சிங் அத்வானியுடன் சந்திப்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: பாரதிய ஜனதாவில் இருந்து சஸ்பென்ட் செய்யப்பட்ட மூத்த தலைவர் ஜஸ்வந்த்சிங் இன்று டெல்லியில் அத்வானியை சந்தித்து பேசினார்.
பாரதிய ஜனதாவின் மூத்த தலைவரான ஜஸ்வந்த்சிங் லோக்சபா தேர்தலில் ராஜஸ்தானின் பால்மர் தொகுதியில் போட்டியிட விரும்பினார். ஆனால் அவருக்கு சீட் கொடுக்கப்படவில்லை.

அதனால் பால்மர் தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிட்டார். ஆனால் பாஜக வேட்பாளரிடம் மிகப் பெரும் வாக்கு வித்தியாசத்தில் ஜஸ்வந்த்சிங் தோல்வியைத் தழுவினார்.
இதைத் தொடர்ந்து மீண்டும் பாஜகவில் சேர ஜஸ்வந்த்சிங் விரும்புகிறார். இது தொடர்பாக இன்று பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானியை அவரது வீட்டில் ஜஸ்வந்த்சிங் சந்தித்துப் பேசினார்.












Click it and Unblock the Notifications