ஜெ. வழக்கில் மேல்முறையீடு: அதிகாரிகளுடன் கர்நாடக சட்ட அமைச்சர் அவசர ஆலோசனை
Subscribe to Oneindia Tamil
பெங்களூரு: ஜெயலலிதா வழக்கில் மேல்முறையீடு செய்வது குறித்து சட்டத்துறை அதிகாரிகளுடன் கர்நாடக சட்ட அமைச்சர் ஜெயச்சந்திரா ஆலோசனை நடத்தினார்.
பெங்களூருவில் இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் அரசு தலைமை வழக்கறிஞர் ரவிவர்ம குமார் மற்றும் சட்டத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

ஏற்கனவே, ஜெயலலிதா வழக்கில் மேல்முறையீடு செய்ய அரசு சிறப்பு வழக்கறிஞர் ஆச்சாரியா சிபாரிசு செய்திருந்த நிலையில், அரசு தலைமை வழக்கறிஞர் ரவிவர்மகுமாரும், அதுபோன்ற சிபாரிசை கர்நாடக அரசுக்கு அளித்ததாக தகவல் வெளியாகியது.
இந்நிலையில், இந்த ஆலோசனை கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது. வரும் 21ம் தேதி நடைபெற உள்ள அமைச்சரவை கூட்டத்தில் இதுகுறித்து ஆலோசிக்க இந்த ஆலோசனை கூட்டம் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications