ஜெ. அப்பீல்: 18 பக்க கர்நாடக தரப்பு வாதத்தை ஹைகோர்ட்டில் தாக்கல் செய்தார் பி.வி. ஆச்சாரியா!
பெங்களூரு: ஜெயலலிதா மேல்முறையீட்டு மனு மீதான கர்நாடக அரசு தரப்பு வழக்கறிஞராக பி.வி.ஆச்சாரியா கர்நாடக அரசால் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று மாலை 4 மணிக்கு உயர்நீதிமன்றத்தில் கர்நாடக அரசு தரப்பு வாதத்தை அவர் தாக்கல் செய்தார்.
ஜெ. அப்பீல் மனு மீதான விசாரணையில், அரசு வக்கீலாக செயல்பட்ட பவானிசிங் நியமனம் செல்லாது என்பதால் அவரது வாதத்தை கவனத்தில் எடுக்க வேண்டாம் என்று உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. எனவே திமுகவின் அன்பழகன் தரப்பு மற்றும் கர்நாடக அரசு தரப்பை எழுத்துப்பூர்வ வாதத்தை தயார் செய்து அளிக்க கூறியது.

அதன்படி அன்பழகன் தரப்பு நேற்று 81 பக்க வாதத்தை ஹைகோர்ட்டில் தாக்கல் செய்தது. இந்நிலையில், கர்நாடக அரசு இன்றுக்குள் வாதத்தை தாக்கல் செய்ய வேண்டியிருந்தது. இதனிடையே கர்நாடக அரசு வக்கீலாக ஆச்சாரியா இன்று நியமிக்கப்பட்டார். எனவே, அவரே வாதத்துக்கு இறுதி வடிவம் கொடுத்தார்.
இதன்பிறகு, மாலை 4 மணியளவில், 18 பக்கம் கொண்ட கர்நாடக தரப்பு வாதத்தை ஹைகோர்ட்டில் தாக்கல் செய்தார். அதில், சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹாவின் தீர்ப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும், ஆதாரப்பூர்வமாக அந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications