ஜெ. வழக்கு: 'பல்டி' பவானி சிங்கை மாற்றக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் தேமுதிக வக்கீல் மனு
டெல்லி: ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் அரசு வழக்கறிஞராக இருந்த பவானி சிங்கே தொடர்ந்து அந்த பதவியில் செயல்பட அனுமதிக்க கூடாது என்று கூறி தேமுதிக வழக்கறிஞர் ஜி.எஸ். மணி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் பவானி சிங் தான் அரசு வழக்கறிஞராக இருந்தார். அதன் பிறகு ஜெயலலிதா கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தபோதும் பவானி சிங் தான் அரசு வழக்கறிஞராக ஆஜரானார். காலையில் ஜெயலலிதாவை ஜாமீனில் வெளியே விட கடும் எதிர்ப்பு தெரிவித்த அவர், மதிய வேளையில் அவருக்கு ஜாமீன் அளிக்கலாம் என்று தெரிவித்தார்.
இந்நிலையில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞரும், தேமுதிகவைச் சேர்ந்தவருமான ஜி.எஸ்.மணி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்ற ஆணைப்படி பெங்களூர் சிறப்பு நீதிமன்பத்தில் அரசு வழக்கறிஞராக பவானி சிங் இருந்துள்ளார். வழக்கின் தீர்ப்பு வெளியான பின்னர், பவானி சிங்கே அரசு வழக்கறிஞராக தொடர்வது முறையல்ல. அதற்கு உச்ச நீதிமன்ற உத்தரவு தேவை.
மேலும், ஜெயலலிதாவின் ஜாமீன் மனு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, முன்னுக்கு பின் முரணாக கருத்துக்களை பவானி சிங் தெரிவித்தார். இதன் காரணமாக அவரது நடவடிக்கைகளில் முரண்பாடு இருப்பதால், அவரை மாற்ற வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications