சொத்து குவிப்பு வழக்கு விசாரணைக்கு தடை கோரிய ஜெ. வழக்கு: நாளைக்கு ஒத்திவைப்பு

Subscribe to Oneindia Tamil

Jaya’s Assets case hearing stay plea SC postpone Tomorrow
டெல்லி: பெங்களூரு தனி நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க கோரிய, முதல்வர் ஜெயலலிதாவின் வழக்கு விசாரணையை உச்ச நீதிமன்றம் நாளைக்கு ஒத்திவைத்துள்ளது.

முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணைக்கு தடை கோரி லெக்ஸ் ப்ராப்பர்டி நிறுவனம் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. அதில், வழக்கில் இருந்து தங்களது சொத்துக்களை விடுவிக்க வேண்டும் என்றும், தங்களது மனுவை விசாரிக்கும் வரை பிரதான வழக்கிற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தது.

இந்த மனுவை பெங்களூரு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதைத் தொடர்ந்து முதல்வர் ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதில், லெக்ஸ் நிறுவன வழக்கு நிலுவையில் உள்ளதால் வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்டடிருந்த இடைக்கால தடையை ஜூன் 16ஆம் தேதி வரை (இன்று) நீட்டித்து உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், ஜெயலலிதா மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனு மீதான விசாரணையை நாளைக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+