ஜெ. ஜாமீன் மனுவை அவசர வழக்காக கருத முடியாது என்ற நீதிபதி! வரிசைப்படி விசாரித்தார்
பெங்களூர்: ஜெயலலிதா ஜாமீன் மனு மீதான விசாரணை ஹைகோர்ட்டில் 73வது பட்டியலில் இருந்ததால் ஜெயலலிதா ஜாமீன் மனுவை அவசர வழக்காக கருதி விரைந்து விசாரிக்க அதிமுக வக்கீல்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அந்த கோரிக்கையை ஏற்க நீதிபதி சந்திரசேகரா மறுத்துவிட்டு வரிசைப்படி வழக்கை எடுத்துக்கொண்டார்.
ஜெ,. ஜாமீன் மனு மீதான விசாரணை, கர்நாடக ஹைகோர்ட்டில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. ஹைகோர்ட்டில் இந்த மனு 73வதாக பட்டியலிடப்பட்டிருந்தது. எனவே, பட்டியல்படி ஒவ்வொரு வழக்காக விசாரணை நடத்திய பிறகு, ஜெயலலிதா மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மதியத்துக்கு மேல் ஆகிவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

முந்தைய வழக்குகளில் காலதாமதம் ஏற்பட்டால், ஜெயலலிதா மனு மீது நாளை மறுநாள் (நாளை கர்நாடக அரசு விடுமுறை) விசாரணை நடைபெறும் வாய்ப்பிருந்தது. எனவே, அதற்குள்ளாக ஜெயலலிதா ஜாமீன் மனுவை விசாரிக்க வைத்துவிட வேண்டும் என்பதில் ராம் ஜெத்மலானி தலைமையிலான வக்கீல் குழு முனைப்பு காட்டியது.
இதையடுத்து இன்று கோர்ட் கூடியதும், நாளை வால்மீகி ஜெயந்தியையொட்டி கர்நாடகாவில் அரசு விடுமுறை என்பதால், ஜெயலலிதா மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று அவரது வக்கீல்கள் கோரிக்கைவிடுத்தனர். ஆனால் அவசர வழக்காக இதை எடுக்க முடியாது என்று கூறிய நீதிபதி, வரிசைப்படித்தான் விசாரிப்பேன் என்று கூறிவிட்டார். இதையடுத்து 73வது வழக்கமாக ஜெயலலிதா ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தது. ஆனால் எதிர்பார்த்தை விட வேகமாக அதாவது மதியத்துக்கு முன்பே விசாரணைக்கு வந்துவிட்டது.
-
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட்












Click it and Unblock the Notifications