ஜெ. ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதியை கோபமடைய செய்த அதிமுகவினர்!
பெங்களூர்: ஜெயலலிதா ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று விசாரணைக்கு வந்ததால், ஹைகோர்ட் மற்றும் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைச்சாலை அருகே அதிமுகவினர் குவிந்தனர். இதனால் அங்கு பதற்றம் நிலவியதால் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டனர்.இதனிடையே ஜாமீன் வழக்கு விசாரணையின்போது, கோர்ட் வளாகத்தில் கூச்சலிட்ட அதிமுகவினரை வெளியேற்ற நீதிபதி உத்தரவிட்டார்.

ஜெயலலிதா ஜாமீன் மனு விசாரணை இன்று வந்த நிலையில், தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் அதிமுக தொண்டர்கள் மத்திய சிறைச்சாலை அருகே குவியலாம் என்று உளவுத்துறை தகவல்கள் பெங்களூர் போலீசாருக்கு கிடைத்தன. இதையடுத்து நேற்று நள்ளிரவு 12 மணி முதல் இன்று நள்ளிரவு 12 மணிவரை பெங்களூர் மத்திய சிறைச்சாலை மற்றும் ஹைகோர்ட் சுற்றிலும் 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு, 144 தடையுத்தரவை பிறப்பித்துள்ளனர்.
இருப்பினும், இன்று காலை முதல் கட்சி கரைவேட்டி, கட்சி கொடிகளுடன் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் சிறை அருகே குவிந்தனர். இதையடுத்து சிறை வளாகத்தில் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டனர். ஒரு இணை போலீஸ் கமிஷனர் தலைமையில், 4 துணை போலீஸ் கமிஷனர்கள், 12 உதவி போலீஸ் கமிஷனர்கள், 34 இன்ஸ்பெக்டர்கள், 60 சப்-இன்ஸ்பெக்டர்கள், கர்நாடக ரிசர்வ் போலீஸ் படையின் 15 பட்டாலியன், ஆயுதப்படையின் 15 பட்டாலியன் போலீசார், 200 ஊர்க்காவல் படையினர் என மொத்தம் 1500க்கும் மேற்பட்ட போலீசார் சிறை வளாகத்தில் குவிக்கப்பட்டனர்.
ஜாமீன் கிடைத்தால் கொண்டாட்டங்களில் ஈடுபடவும், ஜாமீன் கிடைக்காவிட்டால் வன்முறையில் ஈடுபடவும் அதிமுகவினர் திட்டமிட்டதாக போலீசார் கருதியதால் அதை தடுக்க இத்தனை போலீசார் குவிக்கப்பட்டனர். சிறை அருகே அதிமுக எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள் சிலரும் குவிந்திருந்ததால் பரபரப்பு மேலும் அதிகரித்தது.
இந்நிலையில், ஜாமீன் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, நீதிமன்றத்துக்கு வெளியே நின்ற அதிமுகவினர் கூச்சல், குழப்பத்தில் ஈடுபட்டனர். இதனால் விசாரணை நீதிபதியான சந்திரசேகரய்யா, கடும் கோபமடைந்தார். நீதிமன்றத்துக்கு வெளியே நிற்பவர்கள் நீதிமன்ற ஒழுங்கை காப்பாற்ற வேண்டும் என்று உத்தரவிட்டார்.
-
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி












Click it and Unblock the Notifications