அப்பல்லோவில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பே ஒரு வாரமாக ஜெ.வுக்கு காய்ச்சல்.. ஏன் கண்டுகொள்ளவில்லை?
சென்னை அப்பல்லோவில் ஜெயலலிதா அனுமதிக்கப்படுவதற்கு முன்னர் அவருக்கு ஒரு வாரமாக காய்ச்சல் இருந்ததாக எய்ம்ஸ் அறிக்கையை மேற்கோள் காட்டி தமிழக அரசு அறிக்கை வெளியிட்டது.
டெல்லி: உடல் நலக் குறைபாடு காரணமாக சென்னை அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு ஒரு வாரமாக காய்ச்சல் இருந்ததாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா உடல்நலக் குறைபாடு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் கடந்த டிசம்பர் 5-ஆம் தேதி உயிரிழந்துவிட்டார்.
இந்நிலையில் மருத்துவமனையில் அவருக்கு எய்ம்ஸ் மருத்துவக் குழுவினர் 5 முறை சிகிச்சை அளித்தனர். அதுகுறித்து எய்ம்ஸ் மருத்துவமனை தனது அறிக்கையை தமிழக அரசிடம் நேற்று அளித்தது. அதில், அப்பல்லோவில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னர் ஜெயலலிதாவுக்கு ஒரு வாரமாக காய்ச்சல் இருந்தது. அவரது ரத்தத்தில் சர்க்கரை அளவானது 400-ஆக இருந்தது.
அவருக்கு தவறான மருந்துகள் ஏதும் கொடுக்கப்படவில்லை என்றும் தாக்கியதற்கான அறிகுறிகள் ஏதும் இல்லை என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.ஹை-சுகர் மற்றும் கடுமையான காய்ச்சல் இருந்த நிலையிலும் ஏன் மருத்துவமனையில் ஜெயலலிதா முதலிலேயே அட்மிட் செய்யப்படவில்லை என்ற சந்தேகமும் இந்த அறிக்கையின் மூலம் எழுந்துள்ளது.