இறந்து போனாலும் ஜெயலலிதாவும் குற்றவாளியே.. குற்றம் குற்றமே..!
சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்புப் படி மறைந்த முதல்வர் ஜெயலலிதாவும் குற்றவாளிதான்.
டெல்லி: சொத்துக் குவிப்பு வழக்கில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை சுப்ரீம் கோர்ட் விடுவிக்கவில்லை. மாறாக அவருக்கும் சேர்த்துத்தான் இன்று தனது தீர்ப்பை வழங்கியது. இருப்பினும் அவர் உயிருடன் இல்லாததால் சிறைத் தண்டனையை மட்டும் விட்டு விட்டு அபராதத்தை மட்டும் கோர்ட் உறுதிப்படுத்தியது.
1991-1996 ஆம் ஆண்டில் முதல்வராக இருந்த ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா கடந்த 2014ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27ம் தேதி , ஜெயலலிதா சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு சிறை தண்டனை விதித்தார்.

இதையடுத்து ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரும் சிறைக்குப் போனார்கள்.ஜெயலலிதா தனது முதல்வர் பதவியையும், சட்டசபை உறுப்பினர் பதவியையும் இழந்தார். பின்னர் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்து நால்வரும் விடுதலைாயனார்கள். இதை எதிர்த்து கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்தது. இந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட சூழலில் மரணமடைந்தார் ஜெயலலிதா.
இருப்பினும் இந்த வழக்கிலிருந்து ஜெயலலிதாவின் பெயர் நீக்கப்படவில்லை. மாறாக அவரது பெயரும் தொடர்ந்து நீடித்தது. இந்த நிலையில் இன்று தீர்ப்பை அறிவித்தது உச்சநீதிமன்றம். அப்போது குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் கீழ் நீதிமன்றம் (குன்ஹா தீர்ப்பு) விதித்த தீர்ப்பை உறுதி செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அதன்படி இந்த வழக்கில் ஜெயலலிதாவும் குற்றவாளிதான். ஆனால் அவர் உயிருடன் இல்லாததால் சிறை தண்டனை மட்டும் இல்லை. மாறாக அவருக்கு விதிக்கப்பட்ட ரூ. 100 கோடி அபராதம் உறுதியாகியுள்ளது. அந்த அபராதத்தை ஜெயலலிதாவின் சொத்துக்களை விற்று வசூலிக்கவுள்ளது கோர்ட்.
ஜெயலலிதா மறைந்திருந்தாலும் கூட அவருக்கும் சேர்த்துதான் இந்த தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. எனவே இந்தியாவில் உள்ள ஒவ்வொரு அரசியல்வாதிக்கும் கூட இது நல்லதொரு பாடத்தை காட்டிச் சென்றுள்ளது.
-
உறுதியான காங்கிரஸ் திமுக கூட்டணி! அறிவாலய அலார்ம்! சத்தியமூர்த்தி பவன் சரண்டர்! அதிகாலை முடிந்த டீல் -
ஈரோட்டில் ஆசை ஆசையாய் அப்பாவின் சொத்தை மாற்ற போன தினேஷ்.. அரசு ஊழியருக்கு ட்விஸ்ட் -
இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விநியோகம் செய்ய தயார்.. போர் பதற்றத்துக்கு மத்தியில் ரஷ்யா அறிவிப்பு! -
சவுதிக்கு விழுந்த அடி! ஹார்முஸ் ஜலசந்திக்கு பதில் செங்கடல்.. அடிமடியில் கைவைத்த ஈரானால் ரூட் மாற்றம் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? மானியம் வங்கி கணக்கிற்கு வராமல் போவது ஏன்? சமையலறையில் டிஜிட்டல் மர்மம் -
மீடியாவில் பேசாதீங்க.. தடுக்கப்படும் சங்கீதா.. விஜய் தரப்பில் 'மூவ்'? கோடிகளில் எகிறும் சமாதான தூது? -
தேனியில் ஓ பன்னீர்செல்வம் நினைத்தே பார்க்காதது.. கூண்டோடு விலகிய ஆதரவாளர்கள் எடுத்த முடிவு -
பயிர் கடன் ரத்து, உயர் கல்வி ஏற்பு .. விவசாயிகளுக்கான தவெக வாக்குறுதிகளை வெளியிட்ட விஜய் -
நெருப்பு வளையத்தில் இந்தியா! மோடி எடுத்த முடிவால்! போருக்குள் இழுக்க பார்க்கும் இஸ்ரேல்! கையை மீறுது -
ராஜ்யசபா எம்.பி ஆகும் 6 பேர் யார் யார்? திமுக, அதிமுக, தேமுதிக, பாமக இன்று அறிவிக்க திட்டம்! -
சிறகடிக்க ஆசை: விஜயாவிடம் நறுக்குன்னு ஸ்ருதி கேட்ட கேள்வி.. அண்ணாமலை எடுத்த முடிவு! மீனாவின் விபரீத செயல் -
5 ஸ்டார் ஹோட்டல் மாதிரி சில்லென்ற சொகுசு: சென்னை டூ நெல்லை ரயில் பயணிகளுக்கு ரூ.25ல் பெரிய சர்ப்ரைஸ்












Click it and Unblock the Notifications