வருமான வரி ஏய்ப்பு வழக்கு: விசாரணைக்கு செல்ல ஜெ.வுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா மற்றும் அவரது உயிர் தோழியான சசிகலா ஆகியோர் 1993-94ம் நிதியாண்டில் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யவில்லை. இதையடுத்து கடந்த 1996 மற்றும் 1997ம் ஆண்டுகளில் ஜெயலலிதா மற்றும் சசிகலா மீது வருமான வரித்துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்தனர்.
ஆனால் அந்த ஆண்டு தனது வருமானம் வரி செலுத்தும் அளவுக்கு இல்லை அதனால் வரி ஏய்ப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று ஜெயலலிதா தெரிவித்திருந்தார். மேலும் கீழ் நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கக் கோரி ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் அதை இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும் கீழ் நீதிமன்றத்தில் விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என்று நீதிமன்றம் ஜெயலலிதாவுக்கு உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications