டெல்லி கிளம்ப தயாரான ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் திடீர் தீ விபத்து!
போபால்: மத்திய பிரதேச மாநிலம் கஜுராகோ விமான நிலையத்தில் இருந்து டெல்லி நோக்கி புறப்படவிருந்த ஜெர் ஏர்வேஸ் விமானத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் பயணிகள் பீதியடைந்தனர். ஆனால் அதிருஷ்டவசமாக அனைத்து பயணிகளும் காயமின்றி தப்பினர்.
ஜெட் ஏர்வேஸ், 9W 2423 (டெல்லி-வாரணாசி-கஜுராகோ) விமானம், இன்று மதியம், 58 பயணிகளுடன் கஜுராகோ விமான நிலையத்தில் இருந்து, கிளம்ப தயாராகிக் கொண்டிருந்தது. அப்போதுதான், விமானத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது தெரியவந்தது.
இதனால், பயணிகள் பீதியடைந்தனர். பயத்தால் அலறினர். ஆனால் எமெர்ஜென்சி வழிகள் வாயிலாக, பயணிகள் வெளியேற்றப்பட்டனர்.
இந்த சம்பவத்தில் அதிருஷ்டவசமாக பயணிகள், விமான பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் காயமின்றி தப்பினர். சம்பவத்தை தொடர்ந்து கஜுராகோ, விமான நிலையம், அடுத்த 48 மணி நேரத்துக்கு மூடப்பட்டுள்ளது. சம்பவத்திற்கான காரணம் பற்றி விசாரணை நடந்துவருகிறது. மத்திய பிரதேச மாநிலத்தில் அமைந்த பிரபல சுற்றுலா தலம், கஜுராகோ என்பது குறிப்பிடத்தக்கது. காமசூத்ரா தொடர்பான சிற்பங்களுக்கு இந்த நகரம் பேமஸ்.