ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் கைது.. ரூ.538 கோடி பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறை ஆக்ஷன்!
டெல்லி: ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கனரா வங்கியில் கடன் பெற்று ரூ. 538 கோடி பணமோசடி செய்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை கடந்த 1992ஆம் ஆண்டு நரேஷ் கோயல் தொடங்கினார். இந்திய விமான சேவையில் சுமார் 25 ஆண்டுகள் கடந்து பயணித்து வந்த நிலையில் 2017ஆம் ஆண்டுக்குப் பிறகு பெரும் நஷ்டத்தைச் சந்திக்கத் தொடங்கியதால், தனது சேவைகளை படிப்படியாக குறைத்து வந்தது. எனினும், தொடர்ந்து நஷ்டம் காரணமாக கடந்த ஏப்ரல் 2019ஆம் ஆண்டு தனது செயல்பாடுகளை முழுமையாக நிறுத்தியது.

அதன் பிறகு ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் திவால் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டது. இந்நிலையில், கனரா வங்கியிலிருந்து கடன் பெற்று ஜெட் ஏர்வேஸ் அல்லாத வேறு நிறுவனங்களுக்கு பயன்படுத்தி மோசடி செய்ததாக நரேஷ் கோயல் மற்றும் அவரது மனைவி அனிதா கோயல் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு தொடர்பாக நரேஷ் கோயல் மற்றும் அவரது மனைவியின் வீடு மற்றும் அலுவலகங்களில் சிபிஐ சோதனை மேற்கொண்டது.
பின்னர் அமலாக்கத்துறையும் கனரா வங்கியில் கடன் பெற்று ரூ.538 கோடி பண மோசடி செய்ததாக வழக்குப் பதிவு செய்தது. கனரா வங்கியில் இருந்து கடன் பெற்று மோசடி செய்ததாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. அமலாக்கத்துறை அதிகாரிகள், கடந்த ஜூலை மாதம் நரேஷ் கோயல் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.
இந்த வழக்கின் விசாரணைக்காக நரேஷ் கோயல் SFIO எனப்படும் தீவிர மோசடி விசாரணை பிரிவின் தலைமை அலுவகத்திற்கு நேற்று சென்றபோது, அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். அமலாக்கத்துறையின் முந்தைய இரண்டு சம்மன்களை ஏற்று நரேஷ் கோயல் ஆஜராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அமலாக்கத்துறையினர் நீண்ட நேரம் அவரிடம் விசாரணை மேற்கொண்ட நிலையில், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 74 வயதான நரேஷ் கோயல், மும்பையில் உள்ள சிறப்பு PMLA நீதிமன்றத்தில் நாளை ஆஜர்படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications