கிரெடிட் கார்டு இருந்தால் போதும்.. விமான டிக்கெட்டையும் ஈ.எம்.ஐயில் வாங்கலாம்.. ஜெட் ஏர்வேஸ் அதிரடி
Subscribe to Oneindia Tamil
மும்பை: விமான டிக்கெட்டுகளை ஈ.எம்.ஐ எனப்படும் தவணை திட்டத்தின் கீழ் வழங்க ஜெட் ஏர்வேஸ் முன் வந்துள்ளது.
ஆக்சிஸ், ஹெச்.எஸ்.பி.சி, ஐசிஐசிஐ, இன்டஸ்இன்ட், கோடக் மகிந்திரா மற்றும் ஸ்டான்டர்ட் சார்டர்ட் வங்கி ஆகிய 6 வங்கிகளில் ஏதாவது ஒன்றின் கிரெடிட் கார்டு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் தவணை திட்டத்தில் டிக்கெட் வாங்க தகுதியானவர்கள்.

3, 6, 9 மற்றும் 12 மாத ஈ.எம்.ஐ.களில் டிக்கெட்டுக்கான கட்டணத்தை செலுத்திவிட முடியும். மக்கள் கையில் பணப்புழக்கம் குறைந்துள்ள பணமதிப்பிழப்பு சூழலில், வணிகத்தை ஊக்குவிக்க ஜெட் ஏர்வேஸ் இத்திட்டத்தை கையில் எடுத்துள்ளது.
ஆன்லைன் மற்றும் செல்போன் ஆப் மூலம் டிக்கெட் புக் செய்யும்போதே இனிமேல் ஈ.எம்.ஐ தவணை முறையில் டிக்கெட்டை புக் செய்ய ஜெட் ஏர்வேஸ் திட்டம் வழி செய்கிறது.












Click it and Unblock the Notifications