கருப்புப் பண விவகாரத்தில் ப. சிதம்பரம் பாதையை பின்பற்றுகிறது மோடி அரசு: ராம்ஜெத்மலானி சாடல்!
டெல்லி: கருப்புப் பண விவகாரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் பாதையைத்தான் தற்போதைய மோடி அரசும் பின்பற்றுகிறது என்று மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி சாடியுள்ளார்.
இது தொடர்பாக ராம்ஜெத்மலானி கூறியுள்ளதாவது:
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாகட்டும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசானாலும் கருப்புப் பண விவகாரத்தில் நேர்மையாக, முழு ஈடுபட்டுடன் செயல்படவில்லை. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கருப்புப் பணத்தைப் பதுக்கியவர்களிடம் விசாரணையைத் தொடங்கி கைது செய்ய வேண்டும்.

கருப்புப் பணத்தைப் பதுக்கியோர் மீது விசாரணையை உடனே தொடங்க வேண்டும். வெளிநாடுகளில் கருப்புப் பணத்தைப் பதுக்கியிருக்கும் பல்லாயிரக்கணக்கானோரின் பெயரை ஜெர்மனி லஞ்சம் கொடுத்து பெற்றுள்ளது. ஊடகங்களிலும் ஜெர்மனி நிதி அமைச்சர் வெளிப்படையாகவே, கருப்புப் பணத்தைப் பதுக்கியோர் பட்டியலை எந்த ஒரு நிபந்தனையுமின்றி வெளிநாடுகளுடன் பகிர்ந்து கொள்ள தயார் என்று அறிவித்தார்.
ஆனால் அந்தப் பட்டியலைப் பெற நாம் எதுவுமே செய்யவில்லை. இந்த கருப்புப் பணம் தொடர்பான விசாரணையை முழுமையாக சீர்குலைத்தவர் ப. சிதம்பரம்தான். அவரது வழியைத்தான் தற்போதைய நிதி அமைச்சர் ஜேட்லியும் பின்பற்றுகிறார். கருப்புப் பணத்தை மீட்டுக் கொண்டுவருவதில் ஏற்பட்டுள்ள தாமதத்துக்கு காரணமே மத்திய நிதி அமைச்சர் ஜேட்லிதான்.
பிரதமர் மோடி நினைத்தால் நிச்சயமாக கருப்புப் பணத்தை மீட்டுக் கொண்டு வர முடியும். கருப்புப் பணத்தைக் கொண்டு வர வேண்டும் என்று போராடுகிற நான் பாஜகவில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளேன். அப்படியானால் பாஜகவில் எப்படியானவர்கள் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு ராம்ஜெத்மலானி கூறினார்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications