ஜார்கண்ட்: ஓடும் பஸ்சில் மின்சாரம் பாய்ந்து 5 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
தல்டோன்கஞ்ச்: ஜார்கண்ட் மாநிலம் பாலமு மாவட்டம் வைஷ்ராம்பூர் அருகே உயர் அழுத்தமின் கம்பி மீது உரசியதால் மின்சாரம் பாய்ந்து பஸ் பயணிகள் 5பேர் பலியானார்கள்.மேலும் 8பேர் காயமடைந்தனர்.
சத்தீஷ்கார் மாநிலம் ரெய்கார் நகரில் இருந்து ஜார்கண்ட் மாநிலம் ஹரிகர்கஞ்சுக்கு காலை ஒரு பஸ் சென்றது. அந்த பஸ்சின் கூரையில் ஒரு சைக்கிள் ஏற்றப்பட்டு இருந்தது.
தலைநகர் ராஞ்சியில் இருந்து 160 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பாலமு மாவட்டம் வைஷ்ராம்பூர் அருகே பஸ் சென்றபோது, உயரழுத்த மின்சார கம்பி சைக்கிளில் சிக்கியது. இதனால் பஸ் முழுவதும் மின்சாரம் பாய்ந்தது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 5 பயணிகள் பலியானார்கள். 15 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களில் 2 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறுகின்றனர். அந்த பேருந்தில் மொத்தம் 50 பேர் பயணித்தனர். மற்றவர்கள் காயமின்றி தப்பித்தனர்.












Click it and Unblock the Notifications