ஜார்கண்ட்டில் மீண்டும் ஒரு பயங்கரம்.. பசு மாடு கடத்தியதாக கும்பல் தாக்குதல்.. இளைஞர் படுகொலை
ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலம், குந்தி மாவட்டத்தில் பசு கடத்தல் புகாரின்பேரில் நடைபெற்ற கும்பல் தாக்குதலில் ஒருவர் பலியானார், 2 பேர் காயமடைந்தனர்.
ஜார்க்கண்ட்டில் கும்பல் கொலை சம்பவங்கள் நின்றபாடில்லை. இந்த மாநிலத்தில் நடைபெற்ற தப்ரேஸ் அன்சாரி கும்பல் கொலை வழக்கு நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், மற்றொரு கும்பல் கொலை சம்பவம் அங்கு நடந்துள்ளது.

ஜல்தாண்டா சுவாரி கிராமத்தில் இந்த சம்பவம் நேற்று நடந்துள்ளது. அங்கிருந்து மாடுகள் கடத்தி கொண்டு செல்லப்படுவதாக கிராம மக்களுக்கு தகவல் கிடைத்தது. தகவல் தெரிந்தவுடன் கிராமவாசிகள் ஒன்றிணைந்து பசுமாடுடன் சென்ற 3 இளைஞர்களை வழிமறித்து கடுமையாக அடிக்கத் தொடங்கினர்.
தகவல் கிடைத்ததும், கர்ரா காவல் நிலைய போலீசார் உடனடியாக சம்பவ இடம் விரைந்து, காயமடைந்த மூன்று இளைஞர்களையும் முதலுதவிக்காக கர்ராவிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
இதில் கலான்டஸ் பர்லா என்ற இளைஞர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் எப்படி நடந்தது என்பது பற்றி எந்த விவரமும் இல்லை என்றும், இந்த விவகாரம் விசாரணை நிலையில் உள்ளது என்றும் போலீஸ் டி.ஐ.ஜி வேணுகோபால் ஹோம்கர் கூறினார். யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என்றும், ஒரு சில நபர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள் என்றும் அவர் கூறினார்.
கடந்த மூன்று ஆண்டுகளில், ஜார்கண்ட் மாநிலம் முழுவதும் கும்பல் வன்முறையில் குறைந்தது, 21 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications