ஜார்கண்ட்டில் ஜெயிச்சே ஆகனும்.. நேராக களமிறங்கிய பிரதமர் மோடி.. இன்று 5 மணிநேரம் பிரமாண்ட ரோடு ஷோ
ராஞ்சி: ஜார்கண்ட்டில் 2 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் பிரதமர் மோடி இன்று பிரமாண்டமாக ரோடு ஷோ நடத்துகிறார். ராஞ்சியில் தொடங்கும் இந்த ரோடு மொத்தம் 5 மணிநேரம் ரோடு ஷோ 3 கிலோமீட்டர் தொலைவுக்கு 5 மணிநேரம்வரை நடைபெற உள்ளது. இதில் 2 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பங்கேற்பார்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
ஜார்கண்ட்டில் தற்போது காங்கிரஸ் கட்சியின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. காங்கிரஸ் மற்றும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி இணைந்து கூட்டணி ஆட்சியை நடத்தி வருகின்றன. முதல்வராக ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன் பொறுப்பு வகித்து வருகிறார்.

தற்போது ஜார்கண்ட் மாநிலத்துக்கு 2 கட்டங்களாக சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 13, நவம்பர் 20ல் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.
ஜார்கண்ட்டை பொறுத்தவரை மொத்தம் 2.6கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில் 1.31 கோடி வாக்காளர்கள் ஆண்கள். 1.29 கோடி வாக்காளர்கள் பெண்கள் ஆவார்கள்.இவர்களில் 11.84 லட்சம் வாக்காளர்கள் முதல் முறையாக வாக்ககாளிக்க உள்ளனர். மொத்தமாக பார்த்தால் 66.84 லட்்சம் இளம் வாக்காளர்கள் உள்ளனர்.
ஜார்கண்ட்டில் மொத்தம் 81 சட்டசபை தொகுதிகள் உள்ளது. இங்கு ஒரு கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க 41 தொகுதிகளில் வெல்ல வேண்டும். மீண்டும் ஹேமந்த் சோரனின் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி, காங்கிரஸ், லாலு பிரசாத் யாதவின் ஆர்ஜேடி, இடதுசாரிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.
பாஜக கூட்டணியில் ஏஜேஎஸ்யூ, ஐஜத, எல்ஜேபி கட்சிகள் உள்ளன. மொத்தம் 81 தொகுதிகள் உள்ள நிலையில் பாஜக 62 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்நிலையில் ஜார்கண்ட் மாநிலத்தில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றும் முனைப்பில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
அந்த வகையில் பிரதமர் மோடி இன்று பிரமாண்டமாக ரோடு ஷோ நடத்த உள்ளார். இன்று மாலை 4 மணிக்கு ராஞ்சியில் உள்ள ரதூர் ரோட்டில் இருந்து இந்த ரோடு ஷோ தொடங்கி நடைபெற உள்ளது. மொத்தம் 3 கிலோமீட்டர் தூரத்துக்கு 5 மணிநேரம் ரோடு ஷோ நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ராஞ்சி, ஹடியா, கன்கோ, ஹிஜ்ரி உள்ளிட்ட 4 சட்டசபை தொகுதிகளில் இந்த ரோடு ஷோ நடைபெற உள்ளது.மொத்தம் 2 லட்சம் பாஜகவினர் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த ரோடு ஷோ நிகழ்ச்சியையொட்டி கலாசார, பாரம்பரிய நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் சஞ்சய் சேத் தெரிவித்துள்ளார். இதுபற்றி அசாம் முதல்வரும், ஜார்கண்ட் பாஜக துணை பொறுப்பாளருமான ஹிமாந்த பிஸ்வா சர்மா கூறுகையில், ‛‛இன்று நடக்கும் பிரதமர் மோடியின் ரோடு ஷோ வரலாற்றில் இடம்பிடிக்கும். இந்த ரோடு ஷோவில் அதிகமானவர்கள் பங்கேற்பார்கள்'' என்றார்.
அதேபோல் பிரதமர் மோடி வரும் நவம்பர் 13ம் தேதி 2ம் கட்ட தேர்தல் நடக்கும் தொகுதிகளை குறிவைத்து 2வது ரோடு ஷோ நடத்த உள்ளார். நவம்பர் 13ல் முதற்கட்டமாக தேர்தல் நடக்கும் வேளையில் இந்த 2வது ரோடு ஷோவிற்கு பாஜக திட்டமிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications