அப்துல் கலாம் போட்டோவுக்கு மாலை போட்டு அஞ்சலி செலுத்திய ஜார்க்கண்ட் பெண் அமைச்சர்
கோதர்மா, ஜார்க்கண்ட்: ஜார்க்கண்ட் மாநில கல்வி அமைச்சரான நீரா யாதவ், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் போட்டோவுக்கு மாலை போட்டு அஞ்சலி செலுத்தியது பெரும் கண்டனங்களை குவித்துள்ளது.
இந்து பாரம்பரியப்படி ஒருவரது புகைப்படத்திற்கு மாலை அணிவித்து வணங்கினால் அதற்கு என்ன அர்த்தம் என்பதை விளக்கிச் சொல்ல வேண்டியதில்லை. எனவே நீரா யாதவின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
What the....? Jharkhand Education minister pays "homage" to @APJAbdulKalam !!!! pic.twitter.com/UP7YWOJbN8
— Nistula Hebbar (@nistula) July 22, 2015 ஜார்க்கண்ட் மாநிலம் கோதர்மா என்ற இடத்தில் நடந்த நிகழ்ச்சியில்தான் இப்படி நடந்து கொண்டார் அமைச்சர் நீரா யாதவ்.
சம்பந்தபட்ட நிகழ்ச்சியானது ஒரு பள்ளிக்கூடத்தில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடக்க விழாவாகும். இதற்கு சிறப்பு விருந்தினராக நீரா யாதவ் அழைக்கப்பட்டிருந்தனர். நிகழ்ச்சியின் தொடக்கத்திற்கு முன்பு அவர் அப்துல் கலாம் படத்திற்கு மாலை போட்டு வணங்கினார்.
அவர் மட்டுமல்ல, பாஜக எம்.எல்.ஏ மனீஷ் ஜெய்ஸ்வால், பள்ளியின் முதல்வர் ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கலாம் படத்தை வணங்கினர். யாருமே இந்த செயல் தவறு என்று எடுத்துச் சொல்லவில்லை என்பதுதான் வேதனையானது.
இந்த சம்பவம் பெரும் கண்டனத்தைக் குவித்ததைத் தொடர்ந்து இதுகுறித்து நீரா யாதவ் விளக்குகையில் பெரிய மனிதர்கள், மக்களால் மதிக்கப்படும் தலைவர்களுக்கு இது போல மரியாதை செலுத்தப்படுவது வழக்கம்தான். கலாம் மாபெரும் விஞ்ஞானி. எனவேதான் அவருக்கு மாலை அணிவித்து வணங்கினேன் என்று விளக்கம் வேறு கொடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications