Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜார்க்கண்ட்டில் சிக்சர் அடிக்கும் பாஜக! படுதோல்வி அடையும் ஜேஎம்எம்-காங். கூட்டணி! புதிய எக்ஸிட் போல்

Subscribe to Oneindia Tamil

ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாகச் சட்டசபைத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. அங்கு மொத்தம் 82 சீட்கள் இருக்கும் நிலையில், 41 தொகுதிகளில் வெல்லும் கட்சியே ஆட்சியைப் பிடிக்கும். இதற்கிடையே சுதர்சன் நியூஸ் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் இப்போது வெளியாகியுள்ளது. அதில் பாஜக கூட்டணி எளிதாக ஆட்சியைப் பிடிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது

ஜார்க்கண்ட் மாநிலத்தில் இப்போது ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜேஎம்எம்- காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் உள்ளது.. அங்கு எதிர்க்கட்சி வரிசையில் பாஜக உள்ளது.

exit poll 2024 maharashtra exit polls 2024

இந்தி மாநிலங்களில் ஒன்றாக ஜார்க்கண்ட் இருப்பதால் இந்த முறை எப்படியாவது ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் பாஜக களமிறங்குகிறது. மறுபுறம், கடந்த முறையைப் போல வெல்ல வேண்டும் என்பதே இலக்காகக் கொண்டு ஜேஎம்எம்- காங்கிரஸ் போட்டியிடுகிறது.

ஜார்கண்ட் தேர்தல்: அங்கு மொத்தம் 81 தொகுதிகள் உள்ள நிலையில், முதற்கட்டமாக 43 தொகுதிகளில் நவ. 13ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதில் சுமார் 64% வாக்குகள் பதிவாகியிருந்தது. அதேபோல இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று மீதமுள்ள 38 தொகுதிகளில் நடந்தது. வாக்குப்பதிவு அமைதியான முறையிலேயே நடந்து முடிந்த நிலையில், மக்கள் ஆர்வமாக வாக்களித்தனர். அங்கு வரும் நவ. 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

வாக்குப்பதிவு முடிந்துவிட்ட நிலையில், எக்ஸிட் போல் முடிவுகள் வெளியாகி வருகிறது. அதன்படி சுதர்சன் நியூஸ் நடத்திய சர்வே முடிவுகள் இப்போது வெளியாகி இருக்கிறது. அதில் பாஜக கூட்டணி எளிதாக ஆட்சியைப் பிடிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. ஆளும் கட்சியாகத் தேர்தலைச் சந்தித்த காங்கிரஸ்- ஜேஎம்எம் கூட்டணி ஆட்சியை இழக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெல்ல போவது யார்: அங்கு மொத்தம் 81 சீட்கள் இருக்கும் நிலையில், 41 இடங்களைக் கைப்பற்றும் கட்சியே ஆட்சியைப் பிடிக்கும். சுதர்சன் நியூஸ் வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் பாஜக கூட்டணி 46 இடங்களில் வெல்ல வாய்ப்பு இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. அதேநேரம் மறுபுறம் காங்கிரஸ்- ஜேஎம்எம் கூட்டணி 33 இடங்களில் மட்டுமே வெல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதர கட்சிகள் 2 இடங்களில் வெல்ல வாய்ப்பு இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

கடந்த தேர்தல்: கடந்த 2019ம் ஆண்டு ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில் எந்தக்கட்சியும் பெரும்பான்மை பெறவில்லை. அதிகபட்சமாக ஜேஎம்எம் கட்சி 30 சீட்களில் வென்றது. காங்கிரஸ் 16 தொகுதிகளைக் கைப்பற்றி இருந்தது. இதனால் இரு கட்சிகளும் இணைந்து ஆட்சியை அமைத்தது. பாஜக 25 சீட்களில் மட்டுமே வென்ற நிலையில், எதிர்க்கட்சி வரிசையில் அமர வேண்டி இருந்தது. அதேபோல ஜேவிஎம்பி கட்சி 3 இடங்களிலும், ஏஜேஎஸ்யு என்ற கட்சி 2 இடங்களிலும் வென்று இருந்தது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+