தன்னை சீரழிக்க வந்த முதியவரை கத்தியால் குத்திக் கொன்ற 15 வயது சிறுமி
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் தன்னிடம் சில்மிஷம் செய்து தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற 65 வயது நபரை 15 வயது சிறுமி கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலம் சத்ரா மாவட்டம் கதாஹி கிராமத்தைச் சேர்ந்தவர் சுகன் காஷி(65). அவர் கிராமத்தில் உள்ள காட்டுப் பகுதிக்கு புதன்கிழமை சென்றுள்ளார். அப்போது அங்கு 15 வயது சிறுமி ஒருவர் ஆடு மேய்த்துக் கொண்டிருந்திருக்கிறார்.

சிறுமியை சுகன் தவறான எண்ணத்தில் பார்த்துள்ளார். அவர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். ஒருகட்டத்தில் அத்துமீறி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சியும், ஆத்திரமும் அடைந்த சிறுமி தான் வைத்திருந்த கத்தியை எடுத்து சுகனை குத்திக் கொலை செய்தார்.
காட்டில் சுகனின் உடலை பார்த்த கிராமத்தினர் இது குறித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார் வந்து சுகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்தில் கிடந்த கத்தி மற்றும் ரிப்பனை அவர்களை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
விசாரணையில் 15 வயது சிறுமி கொலை செய்தது தெரிய வந்தது. அவரிடம் கேட்டபோது அவரும் தன் குற்றத்தை ஒப்புக் கொண்டார்.












Click it and Unblock the Notifications