காஷ்மீரில் அரசியல் தலைவர்கள் விடுதலை- அமைதியை சீர்குலைக்க கூடாது என நிபந்தனை!
Recommended Video
ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் அரசியல் கட்சித் தலைவர்களை விடுதலை செய்யும் நடவடிக்கைகள் தொடங்கி உள்ளன. இருப்பினும் முன்னாள் முதல்வர்கள் மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா ஆகியோர் விடுவிக்கப்படவில்லை.
ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் நடவடிக்கைக்கு முன்னதாக அம்மாநில முன்னாள் முதல்வர்கள், அரசியல் தலைவர்கள் பெரும் எண்ணிக்கையில் கைது செய்யப்பட்டனர். முன்னாள் முதல்வர்கள் மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா ஆகியோர் வீட்டுக் காவலில் சிறை வைக்கப்பட்டனர்.

தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும் லோக்சபா எம்பியுமான பரூக் அப்துல்லா, பொதுபாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். 2 மாத காலமாகியும் அரசியல் கட்சித் தலைவர்கள் யாரும் விடுதலை செய்யப்படவில்லை.
இதையடுத்து கைது செய்யப்பட்டோரை விடுதலை செய்யக் கோரி குரல்கள் எழுந்தன. இந்நிலையில் நேற்று அரசியல் தலைவர்களான யாவர் மிர், நூர் முகமது, சோயிப் லோன் ஆகியோர் விடுவிக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் அமைதியை சீர்குலைக்கக் கூடாது என்கிற நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் மெகபூபா முஃப்தி, உமர் அப்துல்லா, பரூக் அப்துல்லா ஆகியோர் விடுதலை குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications