For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காஷ்மீரில் அரசியல் தலைவர்கள் விடுதலை- அமைதியை சீர்குலைக்க கூடாது என நிபந்தனை!

Google Oneindia Tamil News

Recommended Video

    ஜம்முவில் வீட்டுக்காவலில் இருந்த அரசியல் தலைவர்கள் விடுவிப்பு |Jammu Leaders Freed From House Arrest

    ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் அரசியல் கட்சித் தலைவர்களை விடுதலை செய்யும் நடவடிக்கைகள் தொடங்கி உள்ளன. இருப்பினும் முன்னாள் முதல்வர்கள் மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா ஆகியோர் விடுவிக்கப்படவில்லை.

    ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் நடவடிக்கைக்கு முன்னதாக அம்மாநில முன்னாள் முதல்வர்கள், அரசியல் தலைவர்கள் பெரும் எண்ணிக்கையில் கைது செய்யப்பட்டனர். முன்னாள் முதல்வர்கள் மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா ஆகியோர் வீட்டுக் காவலில் சிறை வைக்கப்பட்டனர்.

    JK Political leaders released with conditions

    தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும் லோக்சபா எம்பியுமான பரூக் அப்துல்லா, பொதுபாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். 2 மாத காலமாகியும் அரசியல் கட்சித் தலைவர்கள் யாரும் விடுதலை செய்யப்படவில்லை.

    இதையடுத்து கைது செய்யப்பட்டோரை விடுதலை செய்யக் கோரி குரல்கள் எழுந்தன. இந்நிலையில் நேற்று அரசியல் தலைவர்களான யாவர் மிர், நூர் முகமது, சோயிப் லோன் ஆகியோர் விடுவிக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் அமைதியை சீர்குலைக்கக் கூடாது என்கிற நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

    ஆனால் மெகபூபா முஃப்தி, உமர் அப்துல்லா, பரூக் அப்துல்லா ஆகியோர் விடுதலை குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

    English summary
    In Jammu and Kashmir some Political leaders released with Conditions.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X