காங்- ஜேஎம்எம்- ஆர்ஜேடி கூட்டணி வெற்றி.. மகாராஷ்டிராவை தொடர்ந்து ஜார்க்கண்டிலும் பாஜகவுக்கு பேரிடி
Recommended Video
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ்- ஜேஎம்எம்- ஆர்ஜேடி கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இதனால் மகாராஷ்டிரத்தை தொடர்ந்து ஜார்க்கண்டிலும் பாஜக ஆட்சியை இழக்கிறது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்குள்ள 81 தொகுதிகளுக்கு மொத்தம் 5 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று கடந்த வெள்ளிக்கிழமை முடிந்துவிட்டது. இதன் முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது.
மொத்தமுள்ள 81 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 41 இடங்கள் தேவைப்படுகிறது. இந்த தேர்தலில் ஜேஎம்எம் 30 இடங்களிலும் காங்கிரஸ் கட்சி 16 இடங்களிலும் பாஜக 25 தொகுதிகளிலும், ஜேவிஎம்பி 3 இடங்களிலும் ஏஜேஎஸ்யூ இரு தொகுதிகளிலும், ஆர்ஜேடி ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றது.

ஜார்க்கண்ட்
அதாவது காங்கிரஸ்-ஜேஎம்எம்- ஆர்ஜேடி கூட்டணியோ அறுதி பெரும்பான்மையை கடந்து 47 இடங்களில் வெற்றி பெற்றது. இதனால் இந்த மாநிலத்தின் முதல்வராக ஜேஎம்எம் தலைவர் ஹேமந்த் சோரன் ஆகிறார்.

ஆட்சியை இழந்த பாஜக
மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வந்த நிலையில் அக்கட்சியை காங்கிரஸ் - ஜேஎம்எம் கூட்டணி ஓரங்கட்டிவிட்டு ஆட்சி அமைக்கிறது. இதனால் மகாராஷ்டிரத்தை போல் ஜார்க்கண்டிலும் பாஜக ஆட்சியை இழந்துவிட்டது.

சட்டசபை தேர்தல்
ஜார்க்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை பிடித்ததால் இங்கு முதல் முறையாக முத்திரை பதித்தது என்ற பெருமை காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்துள்ளது. மாநிலத்தில் முதன்முதலில் 2000-ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற்றது.

மதுகோடா
அன்றிருந்து கடந்த தேர்தல் வரை ஜேஎம்எம், பாஜக ஆகிய கட்சிகளே மாறி மாறி ஆட்சியை பிடித்து வந்தது. ஒரு முறை மட்டும் 2005-ஆம் ஆண்டு பாஜகவின் முதல்வர் அர்ஜுன் முண்டாவின் ஆட்சி கவிழ்ந்தவுடன் 2006 முதல் ஒரு ஆண்டுக்கு சுயேச்சையான மதுகோடா முதல்வராக பதவி வகித்தார்.












Click it and Unblock the Notifications