பிரியாணி சமைத்தது பெருங்குற்றமாம்.. மாணவர்களுக்கு 10 ஆயிரம் அபராதம் விதித்த ஜேஎன்யூ பல்கலை
பல்கலைக்கழக வளாகத்துக்குள் பிரியாணி சமைத்தற்காக மாணவர்களுக்கு 10,000 ரூபாய் அபராதம் விதித்து இருக்கிறது டெல்லி ஜேஎன்யூ கல்லூரி நிர்வாகம்.
டெல்லி: பல்கலைக்கழக வளாகத்துக்குள் பிரியாணி சமைத்தற்காக மாணவர்களுக்கு 10,000 ரூபாய் அபராதம் விதித்து இருக்கிறது டெல்லி ஜேஎன்யூ கல்லூரி நிர்வாகம். இதன் காரணமாக அங்கு போராட்டம் வெடிக்கும் சூழல் உருவாக்கி இருக்கிறது.
பல்கலைக்கழக நிர்வாக கட்டிடத்திற்கு வெளியே இருக்கும் இடத்தில் மாணவர்கள் ஒன்றாக இணைந்து பிரியாணி சமைத்தால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. மாணவர்கள் பல்கலைக்கழகத்தின் ஒழுக்கத்தை மீறிவிட்டதாக கூறப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் மொத்தமாக நான்கு பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் தற்போது மாணவர்கள் பலர் போராட்டம் செய்யும் முடிவில் இறங்கி இருக்கின்றனர்.

புகார் அளிக்க சென்றனர்
கடந்த ஜூன் மாதம் ஜேஎன்யூ பல்கலைக்கழகத்தின் மாணவத் தலைவர் மோஹித் பாண்டே என்ற மாணவரும், சத்ரூபா சக்ரவர்த்தி என்ற மனைவியும் இணைந்து அந்த கல்லூரியின் துணை வேந்தரை பார்க்க சென்று இருக்கின்றனர். ஆனால் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் அவர்களை பார்க்காமல் பல மணி நேரம் காக்க வைத்து இருக்கிறார். காலையில் இருந்து இரவு வரை காக்க வைத்த அவர் நடுஇரவில் வேண்டுமானால் பார்க்கலாம் என்று கூறி இருக்கிறார். இதையடுத்து மாணவர்கள் அங்கு இருந்து வெளியானார்கள்.

பிரியாணி போராட்டம்
இந்த நிலையில் கோபமடைந்த மாணவர்கள் வெளியே வந்து வளாகத்தில் பிரியாணி சமைத்து இருக்கின்றனர். நான்கு பேர் சேர்ந்து ஒன்றாக சிக்கன் பிரியாணி சமைத்து அங்கேயே சாப்பிட்டு இருக்கிறார்கள். அதுமட்டும் இல்லாமல் அங்கு வந்தவர்களுக்கும் பிரியாணியை பகிர்ந்து அளித்து இருக்கிறார்கள். தங்களது எதிர்ப்பை காட்டும்விதமாக அவர்கள் இந்த செயலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

நால்வருக்கும் அபராதம்
இந்த போராட்டத்தில் ஈடுபட்ட நான்கு பேருக்கும் தற்போது பல்கலைக்கழக நிர்வாகம் அபராதம் விதித்து இருக்கிறது. மோஹித் பாண்டே மற்றும் இரண்டு மாணவர்களுக்கு 6000 ரூபாய் அபாரதமும் சத்ரூபா சக்ரவர்த்தி என்ற மாணவிக்கு 10,000 ரூபாய் அபராதமும் விதித்து இருக்கின்றனர். மேலும் 10 நாட்களுக்குள் அபராத தொகையை கட்ட வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

பல்கலைக்கழகம் விளக்கம்
மாணவர்களுக்கு பல்கலைக்கழக நிர்வாகம் அபராதம் வழங்கும்படி ஒரு கடிதத்தை கொடுத்து இருக்கிறது. அதில் ''நீங்கள் பல்கலைக்கழக நிர்வாகத்தின் ஒழுங்கை மீறிவிட்டிர்கள். இங்கு பிரியாணி சமைத்து சாப்பிடுவது பெரிய குற்றமாகும். அதனால் உங்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது'' என்று எழுதப்பட்டு உள்ளது. ஆனால் பத்திக்கையாளர்களிடம் பல்கலைக்கழக நிர்வாகத்தில் இருந்து யாரும் இதுகுறித்து பேச முன்வரவில்லை.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications