1990களில் கூட இவ்வளவு மோசம் இல்லை.. இன்று காஷ்மீர் நிலைமை தெரியுமா.. குமுறும் பத்திரிக்கையாளர்கள்
Recommended Video
சென்னை: காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பத்திரிக்கையாளர்களால் செய்திகளை அனுப்ப முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளதாம்.
இந்திரா காந்தி காலத்தில் கொண்டுவரப்பட்ட எமெர்ஜென்சியின்போது செய்தியாளர்கள் பட்ட அனுபவங்களை நினைவுகூர்வதை போல இந்த நிலைமை இருப்பதாக பத்திரிக்கையாளர்கள் கூறுகிறார்கள்.
காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அங்கு, இணையதள சேவைகள் கட் செய்யப்பட்டுள்ளன. ஏராளமான துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

தகவல் தொடர்பு
இந்த கெடுபிடிகளால், தகவல் தொடர்புக்கு வேறு வழியில்லாததால், ஊடகத்தினர், அங்கேயிருந்து செய்திகளை அனுப்பி வைக்க முடியவில்லை. முன்னணி ஊடகத்தினருக்கு, நிருபர்கள் இருந்தும்கூட, நாளிதழ்களுக்கு செய்திகள் அனுப்பி வைக்க முடியவில்லை.

அப்போ இப்படி இல்லை
"காஷ்மீரில் தீவிரவாதமும், கலவரமும் மிகவும் உச்சத்தில் இருந்த 1989 டிசம்பர் முதல், முதல் 1995 பிப்ரவரி வரையிலான கால கட்டங்களில் கூட என்னால் காஷ்மீரிலிருந்து எப்படியோ, செய்தியை அனுப்ப முடிந்தது. ஆனால், இன்று சோகம் என்னவென்றால், நான் வேலை பார்க்கும் செய்தித்தாளில் ஸ்ரீநகர் டேட்லைன் போட்ட ஒரு செய்தியை கூட பார்க்க முடியவில்லை" என்று தெரிவிக்கிறார் முன்னணி ஆங்கில நாளிதழ் செய்தியாளர் ஒருவர்.

அரசு துறை
அந்த காலகட்டத்தில், செல்போன்கள் இல்லை. லேன்ட்லைன் போன்கள், டெலக்ஸ் மெஷின் இருந்தது. பேக்ஸ் வசதி கூட எங்காவது கிடைக்கும். மத்திய தந்தி அலுவலகத்தில் இருந்து கூட செய்தி அனுப்பியுள்ளேன். ஆனால், இப்போது எல்லாமே தனியார்மயமாகியுள்ளது. ஆனால் அனைத்தையும் மூட அரசு உத்தரவிட்டுள்ளது. இது முன் எப்போதும் இல்லாதது என்கிறார் அந்த செய்தியாளர்.

பாகிஸ்தானிலிருந்து அனுப்பினேன்
மேலும் அவர் கூறும் ஒரு தகவல் சுவாரசியமானது. நான் கொழும்பு, இஸ்லாமாபாத் ஆகிய நகரங்களிலும் செய்தியாளராக பணியாற்றியுள்ளேன். 1999ம் ஆண்டு முஷ்ரப் தலைமையில் ராணுவ கிளர்ச்சி நடந்தபோது, பாகிஸ்தானில் அனைத்து தகவல் தொடர்பு சாதனங்களும் முடக்கப்பட்டன. ஆனால், அங்கேயுள்ள பத்திரிக்கையாளர் நண்பரின் சேட்டிலைட் போன் மூலம், எனது செய்தியை எனது பத்திரிக்கை அலுவலகத்திற்கு தெரிவிக்க முடிந்தது என்கிறார் அவர்.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் சி. ஜோசப் விஜய்.. 2 தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர்!












Click it and Unblock the Notifications