நீதிபதி லோயா மர்ம மரண வழக்கு... அமித்ஷாவை முன்வைத்து உச்சநீதிமன்றத்தில் அனல் பறந்த வாதம்
நீதிபதி லோயா மர்ம மரண வழக்கு விசாரணையில் உச்சநீதிமன்றத்தில் வாதங்கள் அனல் பறந்தன.
Recommended Video

டெல்லி: சோராபுதீன் என்கவுண்ட்டர் வழக்கை விசாரித்த நீதிபதி லோயாவின் மர்ம மரணம் குறித்த வழக்கில் பாஜக தேசியத் தலைவர் அமித்ஷாவை முன்வைத்து உச்சநீதிமன்றத்தில் நேற்று அனல்பறக்க விவாதம் நடைபெற்றது.
குஜராத் உள்துறை அமைச்சராக அமித்ஷா பதவி வகித்த போது 2005-ம் ஆண்டு சோராபுதீன் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். ஆனால் இது போலி என்கவுண்ட்டர் என குற்றம்சாட்டு அமித்ஷா கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.
இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்த சிபிஐ நீதிமன்ற நீதிபதி லோயா 2014-ம் ஆண்டு திடீரென மரணமடைந்தார். நீதிபதி லோயாவின் மரணம் குறித்து சர்ச்சை எழுந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

துஷ்யந்த் தவே
இவ்வழக்கில் மகாராஷ்டிரா அரசு சார்பில் அமித்ஷாவின் வழக்கறிஞரான ஹரீஷ் சால்வே, முன்னாள் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி ஆகியோர் நேற்று ஆஜராகினர். மும்பை வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பாக துஷ்யந்த் தவே ஆஜரானார். தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் சந்திரசூட், கான்வில்கர் உள்ளிட்டோர் அடங்கிய பெஞ்ச் முன்பாக இவ்வழக்கின் விசாரணை நேற்று நடைபெற்றது. இந்த விசாரணையின் போது ஹரீஷ் சால்வே, நீதிபதி லோயா மாரடைப்பு காரணமாகவே இறந்தார். இது தொடர்பான ஆவணங்கள் மும்பை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றார்.

சால்வே ஆஜராக எதிர்ப்பு
துஷ்யந்த் தவே வாதிடுகையில், சோராபுதீன் என்கவுண்ட்டர் வழக்கில் அமித்ஷாவுக்காக ஆஜரானவர் ஹரீஷ் சால்வே. இந்த வழக்கில் அவர் மகராஷ்டிரா அரசு வழக்கறிஞராக ஆஜராகக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்தார். மேலும், நீதிபதி லோயா பிரேத பரிசோதனையின் போது அவரது குடும்பத்தினர் யாரும் அழைக்கப்படவில்லை. இது தொடர்பாக உரிய முறையில் விசாரிக்க வேண்டும் என்றார்.

ஹரீஷ் சால்வே எதிர்ப்பு
ஆனால் ஹரீஷ் சால்வே, நீதிபதி லோயாவின் மரணத்தை சிலர் பயன்படுத்திக் கொள்ள நினைக்கின்றனர். ஏற்கனவே நிறைய கெட்ட பெயரை உருவாக்கிவிட்டீர்கள் என்றார். இதற்கு பதிலடி தந்த தவே, உங்களால்தான் நீதித்துறைக்கே கெட்ட பெயர் ஏற்படுகிறது என்றார். இதை ஹரீஷ் சால்வே மிகக் கடுமையாக எதிர்த்த போது, தார்மீக நெறிகள் பற்றி எனக்கு நீங்கள் பாடம் எடுக்க தேவையில்லை என திருப்பி அடித்தார் துஷ்யந்த் தவே. அப்போது குறுக்கிட்ட நீதிபதி சந்திரசூட், யாருடைய பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் கருத்துகளை வைக்க வேண்டாம் என்றார்.

முகுல் ரோத்தகி ஆஜர்
முன்னாள் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகியும் மகாராஷ்டிரா அரசு சார்பாக ஆஜராகி, மும்பை வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பாக ஆஜராகி இருக்கும் துஷ்யந்த் தவே வாதாட அனுமதிக்கக் கூடாது. எதற்காக மும்பை வழக்கறிஞர்கள் சங்கத்தின் கருத்தை கேட்க வேண்டும் என்றார். இதை நிராகரித்த தவே, நீதிபதி லோயாவின் உறவினர்கள் விசாரணை நடத்த கோருகின்றனர். லோயாவின் மகன் முதலில் விசாரணை கோரினார். பின்னர் நெருக்கடியால் இந்த கோரிக்கையை அவர் எழுப்பவில்லை என்றார்.

தடை விதிக்க எதிர்ப்பு
மேலும் நீதிபதி லோயா மாரடைப்பால்தான் மரணமடைந்தார் எனில் ஏன் நீதி விசாரணையை எதிர்க்க வேண்டும்? என்றார். அப்போது குறுக்கிட்ட ஹரீஷ் சால்வே, நீதிபதி லோயா மரணம் குறித்து ஊடகங்கள் விவாதிக்க தடை விதிக்க வேண்டும் என்றார். இதை துஷ்யந்த் தவே கடுமையாக எதிர்த்தார். சசிதரூர், சிதம்பரம் விவகாரங்களை ஊடகங்கள் நிறையவே விவாதித்துவிட்டன; இந்த தேசம் விவாதங்களை நடத்துவதை யாரும் தடுக்க முடியாது என்றார்.
-
கடும் கோபத்தில் மோடி.. சென்னை ரோடுஷோ - பிரசாரமே வேண்டாம்.. பாஜக தலைகளை பந்தாட தயாராகும் மேலிடம் -
இங்க இருக்குற திருவண்ணாமலைக்கு ஏர்போர்ட்.. அந்த பேச்சு பேசின அஸ்வத்தாமன் பெயர் லிஸ்டில் இல்லையே! -
புதுச்சேரியில் பிரதமர் மோடி ரோடுஷோ.. மலர்தூவி உற்சாக வரவேற்பு கொடுத்த மக்கள்.. -
2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியில்லை? மொடக்குறிச்சியை திணிக்கும் பாஜக மேலிடம்? Annamalai அப்செட் -
நேரில் வாங்க அண்ணாமலை.. பாஜக மேலிடம் போட்ட திடீர் உத்தரவு.. சென்னையில் மோடியுடன் முக்கிய மீட்டிங் -
அண்ணாமலை மிஸ்ஸிங்.. அமித் ஷா பிளான்.. அடுத்து என்ன? அண்ணாமலை எடுக்கும் முடிவு இதுதான்? -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
ஆதரவாளர்களுக்கு சீட்.. அண்ணாமலை வைத்த டிமாண்ட்.. பாஜக வேட்பாளர் பட்டியல் தாமதமாவதன் பின்னணி! -
சர்ப்ரைஸ் வானதி சீனிவாசன்.. நோஸ் கட் அண்ணாமலை.. 2021 தேர்தல் பாஜக பிளாஷ்பேக் -
மிட்நைட்டில் 4%வாக்குப் பதிவு? 'ஆந்திரா' பாணியில் தேர்தல்? எச்சரித்த நிர்மலா கணவர் -
சென்னை Red zone.. நாளை சென்னைக்கு வரும் பிரதமர் மோடி.. டிரோன்களுக்கு தடை.. கடும் பாதுகாப்பு! -
விடிய விடிய அதிகாரிகள் சிறைபிடிப்பு! "இது கிரிமினல் தோல்வி" மேற்கு வங்க அரசை கண்டித்த உச்சநீதிமன்றம்












Click it and Unblock the Notifications