7 தமிழரை விடுதலை செய்ய கருணையுடன் உதவுங்கள்- சோனியாவுக்கு உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி தாமஸ் கடிதம்
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் 7 தமிழரையும் விடுவிக்க கருணை காட்டுங்கள் என்று முன்னாள் நீதிபதி தாமஸ், காங்கிரஸ் தலைவரும், ராஜீவின் மனைவியுமான சோனியா காந்திக்கு கடிதம் எழுதியுள்ளார்.
Recommended Video

டெல்லி: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் 7 தமிழரையும் கருணை அடிப்படையில் விடுவிக்க உதவ கோரி காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி தாமஸ் கடிதம் எழுதியுள்ளார்.
கடந்த 1991-ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்ட ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். இதில் முருகன், நளினி, சாந்தன், பேரறிவாளன் ஆகிய 4 பேருக்கு தூக்குத் தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.
பேரறிவாளன் உள்ளிட்டோருக்கு தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்த பெஞ்சில் இருந்தவர் நீதிபதி தாமஸ். ஆனால் அண்மைக்காலமாக பேரறிவாளன் உள்ளிட்டோர் விடுதலைக்காக முன்னாள் நீதிபதி தாமஸ் கருத்து தெரிவித்து வருகிறார்.

ஆயுள் தண்டனை
ராஜீவ் வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட நளினிக்கு 2000-ஆம் ஆண்டிலும், மற்ற 3 பேருக்கும் கடந்த 2014- ஆம் ஆண்டிலும் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டு ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

விடுதலை குறித்து
ராஜீவ் காந்தி வழக்கில்ல் ஆயுள் தண்டனை கைதிகளாக பேரறிவாளன் உட்பட மொத்தம் 7 பேர் உள்ளனர். இவர்கள் 77 பேரையும் விடுதலை செய்ய முடிவெடுத்து தமிழக அரசு கடந்த 2014-ஆம் ஆண்டு பிப்ரவரி 18-ஆம் தேதி சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு உச்சநீதிமன்றத்தை நாடியது. இது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

சோனியாவுக்கு கடிதம்
இந்நிலையில் முன்னாள் நீதிபதி தாமஸ் கடந்த அக்டோபர் 18-ஆம் தேதி சோனியாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் கடந்த 1991-ஆம் ஆண்டு முதல் குற்றவாளிகள் 7 பேரும் சிறையில் உள்ளனர். அவர்களை விடுவிக்க வேண்டும் என்ற தமிழக அரசு 2014-இல் கொண்டு வந்த தீர்மானத்தை அப்போதைய மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்தது. அந்த வழக்கானது தற்போது உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

முடிந்தால் பிரியங்காவும்
ஆயுள் தண்டனைக்கு மேல் சிறையில் நீண்ட காலமாக சிறையில் உள்ள 7 பேரையும் விடுவிக்க வேண்டும் என்று குடியரசு தலைவருக்கு நீங்களும், ராகுலும், முடிந்தால் பிரியங்காவும் கடிதம் எழுத வேண்டும். அவ்வாறு எழுதினால் அதை தற்போதைய மத்திய அரசு ஏற்கும். மனிதாபிமான அடிப்படையில் இதை உங்களால் மட்டுமே செய்ய முடியும். நீதிபதியாக அவர்களுக்கு தண்டனையை உறுதி செய்த நானே இந்த கடிதத்தை எழுவதற்கான காரணம் இந்த சூழலில் உங்களால் கருணை காட்ட முடியும் என்பதால்தான்.

குற்றவாளி விடுவிப்பு
காந்தியடிகளை நாதுராம் கோட்சே சுட்டுக் கொன்ற வழக்கில் அவரது சகோதரர் கோபால் கோட்சேவுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. எனினும் கடந்த 1964-ஆம் ஆண்டு நேரு தலைமையிலான மத்திய அரசு கோபால் கோட்சேவை விடுவித்தது. எல்லாம் வல்ல இறைவனால் மட்டுமே இந்த 7 கைதிகளுக்கும் கருணை காட்ட முடியும் என்று நான் கருதுகிறேன். அவர்களை விடுவிக்குமாறு நான் கேட்டு உங்களுக்கு கடிதம் எழுதியது தவறு என்றால் என்னை மன்னித்து விடுங்கள் என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications